Connect with us
vijay_main_cine

Cinema News

குன்னூர் குளிரு….! கூச்சப்பட்ட விஜய்….அலேக்கா தூக்கி கொண்டாடிய படக்குழு…!

தென்னிந்திய முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் பொதுவாகவே வெளியிடங்களில் அமைதியை கடைப்பிடிப்பவர். முக்கியமாக படப்பிடிப்பின் போதும் யாரிடமும் அந்த அளவுக்கு பேச மாட்டார் என நிறைய திரைப்பிரபலங்கள் கொடுத்த நேர்காணலில் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அது மட்டுமில்லாமல் இப்ப பரவாயில்லை, ஆரம்ப காலங்களில் படங்களில் நடிப்பார் பின் அமைதியாக போய் உட்காந்திருவார் என்று தான் பல பேர் கூறினார்கள்.

vijay1_cine

மேலும் மேடையில் சில விழாக்களில் பேசும் போது கூட யோசித்து யோசித்து தான் பேசுவார். இந்த நிகழ்வை மையமாக வைத்து நடிகை குஷ்பு ஒரு பேட்டியில் விஜயை பற்றி சில விஷயங்களை கூறினார். ஏற்கெனவே விஜய், குஷ்பு, ரம்பா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படம் மின்சாரக்கண்ணா. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல பாடல்களும் செம ஹிட்.

vijay2_cine

குஷ்பு இந்த படத்தில் ஒரு பெண்ணாதிக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின் சூட்டிங் பெரும்பாலும் குன்னூரில் தான் படமாக்கியிருக்கிறார்கள். அப்போது அங்கு நிறைய காட்டேஜ்கள் இருக்க நடிகர்களெல்லாம் அங்கு தான் தங்கியிருந்தார்களாம். இரவு நேரத்தில் குஷ்பு, ரம்பா மற்றும் பலர் சீட் , இன்டோர் கேம்ஸ் எல்லாம் விளையாடுவார்களாம்.

vijay3_cine

அப்படி ஒரு நாள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கே.எஸ்.ரவிக்குமார் வந்து குஷ்புவிடம் விஜயும் விளையாடனும் என்று ஆசைப்படுகிறார் என்று சொன்னாராம். வரச்சொல்லுங்கள் என்று கூற ரவிக்குமார் இல்ல விஜய் ரொம்ப கூச்சப்படுகிறார் நீங்களே கூப்பிடுங்கள் என்று சொன்னாராம். பின் குஷ்பு கூப்பிட்டதும் விஜய் வந்தாராம்.அதன் பின் தான் ஒட்டு மொத்த படக்குழுவினருடன் இணைந்தாராம். அந்த நேரத்தில் விஜய்க்கு பிறந்த நாள் வர குஷ்பு எல்லாரும் சேர்ந்து விஜயை தூக்கி கொண்டாடினார்களாம்.இதை குஷ்பு ஒரு பேட்டியில் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top