Connect with us

Cinema News

விஜய்க்கும் வேளாங்கண்ணிக்குமான தொடர்பு.! அதுவும் அந்த சம்பவத்தை மறக்கவே முடியாதாம்…

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமானவராக  திகழ்கிறார் தளபதி விஜய். இவர் நடிக்கும் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, அந்த படம் எப்படி இருக்கும் என தெரியாமலே அதற்கான ஓப்பனிங் என அனைத்தும் இவரது மாஸ் அந்தஸ்தை உணர்த்துகிறது.

இவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ஓவ்வொரு திரைப்படம் முடிந்ததும் வேளாங்கண்ணி மாதா கோவில் செல்வாராம். அதனை விஜயும் தற்போதும் பின்பற்றி வருகிறாராம்.

விஜய் முதல் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை, உடனே SAC விஜயகாந்த் உடன் விஜயை வைத்து செந்தூரபாண்டி எனும் படத்தை எடுத்தனர். அந்த படம் எதிர்பார்த்தபடி நல்ல வெற்றியை கொடுத்தது. உடனே விஜய் , SAC , மாஸ்டர் தயரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆகியோர் வேளாங்கண்ணி சென்றுள்ளார்.

இதையும் படியுங்களேன் –  எனக்கு நடிக்க தடை.! விஜயகாந்த், சிம்பு தான் என் பக்கம் இருந்தாங்க.. கிரிக்கெட் வீரரின் சீக்ரெட்ஸ்…

அப்போது வழியில் கார் நிறுத்தி இளைப்பாறி கொண்டிருக்கும் போது, ஒரு பாட்டி விஜயிடம் வந்து, ‘;தம்பி நீ தானே, விஜயகாந்த் தம்பியா நடிச்சிருந்தே, நல்லா நடிச்சிருக்கபா.’ என கூறினாராம்.

உடனே சேவியர் பிரிட்டோ விஜயிடம், ‘ விஜய் உன்ன தமிழக மக்கள் ஞாபகம் வச்சிக்கிட்டாங்க’ என கூறினாராம். அப்போது தான் SACக்கு , எதற்காக விஜயகாந்த் உடன் விஜயை நடிக்க  வைத்தோமோ, அது நிறைவேறியது.’ என நிம்மதியாக இருந்தாராம். இதனை மாஸ்டர் தயாரிப்பாளரும், விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top