விஜயிற்கு விருப்பமே இல்லாமல் நடித்த படம்… ஒரே நாளில் மாஸ் ஹிட்டாக்கிய எஸ்.ஏ.சி

SA Chandrasekhar: விஜயின் ஆரம்பகாலங்களில் அவரின் தந்தை சந்திரசேகர் தான் கதையை கேட்டு ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்குவார். அப்படி தந்தை சொன்ன எல்லாவற்றையும் அச்சு பிசிராமல் செய்வார். அப்படி தந்தை சொன்ன ஒரு படத்தினை விருப்பமே இல்லை என்றாலும் நடித்து கொடுத்து இருக்கிறார் விஜய்.

விஜய் தன்னுடைய துப்பாக்கி படம் வரை எல்லா கதையை தந்தையை கேட்க தான் சொல்வார். அவர் ஓகே சொல்லிய கதைகளில் தான் விஜய் நடித்து வந்தார். அதனால் சந்திரசேகர் எப்போதுமே மகனுக்காக கதைகளை ஓகே செய்வதில் அதிக கவனம் செலுத்துவார்.

இதையும் படிங்க : மகனுக்காக பல ஹீரோக்களின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ.சி… அம்புட்டு பாசமோ!

பிற மொழியில் ஹிட் கொடுத்த படங்களை பார்த்தால் அதை தன்னுடைய மகன் செய்தால் தமிழில் இயக்க துடிப்பாராம். அப்படி அவர் விருப்பத்தன் பேரிலேயே விஜய் சில ரீமேக் படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கேற்ப விஜய் ரீமேக் படங்களும் ஹிட் கொடுக்கும்.

தெலுங்கில் வெளிவந்த பவித்ர பந்தம் படத்தினை பார்த்த சந்திரசேகர் ரீமேக் உரிமையை வாங்கினார். அதை விஜயிற்கு போட்டு காட்டி ரீமேக் செய்யலாம் எனக் கூறி இருக்கிறார். ஆனால் விஜய் இது ஹீரோயின் சாதகமாக இருக்கு. படம் ஓடாது என மறுத்து விட்டாராம்.

ஆனால் இந்த படம் கண்டிப்பாக் வெற்றி பெறும் என சந்திரசேகர் சொல்லி இருக்கிறார். அவர் பேச்சை தட்ட முடியாத விஜய் நடித்து விட்டார். படமும் ரிலீஸாகி விட்டது. ஆனால் முதல் நாள் படம் சரியாக ஓடவில்லை. விநியோகிஸ்தர்கள் ப்ரிண்ட்டை வாங்கி சென்று விட கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நயன்தாராவே ஒண்ணும் கொடுக்கல!.. கல்யாணம் ஆன பின்னரும் ஷாருக்கான் கிட்ட ஃபீலிங்கை கன்ட்ரோல் பண்ண முடியல போல!..

உடனே சந்திரசேகர் தன்னுடைய பிஆர்.ஓவை அழைத்து பிரிந்து சேர்ந்த தம்பதிகள் 10 பேரை தயார் செய்து இருக்கிறார். அவர்களை விஜயின் முன் அழைத்து வந்து மாலை மாற்றிக்கொள்ள சொல்லி அதை ப்ரோமோஷனாக வைத்து படத்தினை ஓட்டி இருக்கிறார். அந்த படம் தான் ப்ரியமானவளே.

 

Related Articles

Next Story