ஓவரா படம் எடுத்தா ‘கோப்ரா’ கூட தோத்து போயிடும்….இப்படி சொல்லிட்டாரே தளபதி விஜய்…

Published on: September 1, 2022
vijay_main_cine
---Advertisement---

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் வாரிசு படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay1_cine

அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் இணைகிறார். ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் மிகப்பெரும் வெற்றிப்பெற்ற மாஸ்டர் திரைப்படத்தால் மீண்டும் இவர்கள் பக்கம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. பொதுவாகவே நடிகர் விஜய்க்கு புதிய இயக்குனர்களின் படத்தில் நடிப்பது என்பது மிகவும் பிடிக்கும் என ஒரு சமயம் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்கள் : வாரிசு படம் கற்றுக்கொடுத்த பாடம்…! புது டெக்னிக்கை பயன்படுத்திய ஜெய்லர் படக்குழு…!

vijay2_cine

இதை ஒரு மேடையில் அவரே கூறியிருக்கிறார். லோகேஷ், எச்.வினோத், அஜய் ஞானமுத்து போன்றோரெல்லாம் இப்ப வந்த இயக்குனர்கள் தான். மேலும் நேற்று ரிலீஸான கோப்ரா படத்தின் விமர்சனத்தை அப்பவே கணிச்சு சொல்லியிருக்கிறார் விஜய். அதாவது அவருக்கு புதிய இயக்குனர்களின் படங்கள் பிடிக்கும் எனவும் அவர்கள் இயக்கும் படங்களை பெரும்பாலும் பார்த்து வருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

vijay3_cine

இதையும் படிங்கள் : சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் ரஜினியா….? அதுவும் ஓடல..இதாவது தப்பிக்குமா…?

மேலும் எப்படி பட்ட இயக்குனராக இருந்தாலும் தயவுசெய்து ஒரு படத்தை 2.30 மணி நேரத்திற்கு மேலாக எடுக்காதீர்கள். அதற்கு மேல் எடுத்தால் ரசிகர்கள் வாட்சை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பொழுது போக்கிற்காக படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு எப்பேற்பட்ட நல்ல படத்தை எடுத்தாலும் 2.30 மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டால் பொறுமை இழந்து விடுவார்கள் , ரொம்ப நேரம் படம் எடுத்தால் பாம்பு கூட கீரியிடம் தோற்று விடும் என கூறியிருக்கும் வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கோப்ரா படத்திற்கு பொருந்துவதால் டிரெண்டாகி வருகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.