விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?

Published on: April 6, 2024
---Advertisement---

விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், அவரது இடத்தில் இருந்து தனது தம்பி சண்முக பாண்டியன் பிறந்தநாளுக்கு போர்ஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் விஜய பிரபாகரன். தேமுதிக கட்சி சார்பாக விஜய பிரபாகாரன் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

தேர்தல் சமயத்தில் திடீரென தம்பிக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருப்பது என்ன மாதிரியான அரசியல் என தெரியவில்லையே என்கிற கேள்விகளையும் அரசியல் வட்டாரத்தில் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: கில்லி படத்தின் ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு பின்னால இவ்ளோ பெரிய சோகமா?..

விஜய பிரபாகரன் சினிமாவில் நடிக்காமல் அரசியலில் முழு வீச்சாக ஈடுபட்டு வருகிறார். இரண்டாம் மகனான சண்முக பாண்டியன் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.  படை வீரன் படம் ரொம்ப வருஷமாக உருவாகி வருகிறது.

சண்முக பாண்டியனுக்கு உதவி செய்ய ராகவா லாரன்ஸ், விஷால் எல்லாம் அவரது படங்களில் நடிப்பதாக உறுதியளித்துள்ளனர். 32வது பிறந்தநாளை இன்று சண்முக பாண்டியன் கொண்டாடி வரும் நிலையில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லியான போர்ஷ் சொகுசு காரை பரிசாக விஜய பிரபாகரன் வழங்கி உள்ளார்.

இதையும் படிங்க: தூங்குனது போதும் அவதாரம் எடுத்து எழுந்து வாங்க கல்கி!.. பிரபாஸ் படத்தை பங்கம் பண்ணும் ரசிகர்கள்!..

அப்பாவை போலவே அன்போடு தம்பி மீது இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு விஜய பிரபாகரன் கோடிக்கணக்கில் செலவு செய்து கார் வாங்கி கொடுத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

படை வீரன் படத்தில் இருந்து டீசர் ஒன்றும் வெளியிட்டு சண்முக பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.