தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. துவக்கத்திலிருந்தே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் எப்படிப்பட்ட வேடமாக இருந்தாலும் நடித்ததுதான் இவரின் பிளஸ். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பன்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டும் நடிகர்களை ஒப்பிடும்போது விஜய் சேதுபதி வேறுமாதிரி தெரிந்தார். அதனாலேயே ரசிகர்களுக்கு அவரை பிடித்துப்போனது.
ஒருகட்டத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்து வெளியான மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, வில்லன் வேடமும் அவரை தேடி வருகிறது. விஜய் சேதுபதி தற்போது 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
வில்லன் வேடம் என்றால் கொஞ்சம் அதிகமாகவே கேட்கிறாராம். இந்நிலையில், விஜயை வைத்து வாரிசு படத்தை இயக்கிய தில் ராஜு தயாரிப்பில் விஜய தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார்கள்.
அவரோ 20 கோடி சம்பளம் கேட்க தில் ராஜு ஆடிப்போய்விட்டாராம். எனவே, அந்த வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா அல்லது அரவிந்த்சாமி இருவரில் யாரேனும் ஒருவரை நடிக்கவைக்கலாம் என முடிவெடுத்து அவர்களிடம் பேசி வருகிறார்களாம்.





