எப்பா எவ்ளோ நாளுனாலும் எடுத்துக்கோ….! வெற்றிமாறனிடம் விடுதலைக்காக கெஞ்சும் விஜய் சேதுபதி…

Published on: August 30, 2022
vijay_main_cine
---Advertisement---

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் சூரி நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படம் விடுதலை. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்க வரும் ஏப்ரல் மாதத்தில் முழு படத்தையும் எடுத்து விடுவதாக தயாரிப்பாளரிடம் வெற்றிமாறன் வாக்கு கொடுத்துள்ளார்.

vijay1_cine

முக்கால் வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் கொஞ்ச நாள் கால்ஷீட் கொடுங்கள் என விஜய்சேதுபதியிடம் கேட்க அவரோ இன்னும் கொஞ்சமா என சரி என மன நிலைமைக்கு வந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சூரியிடம் இன்னும் 30 நாள் கால்ஷீட் கேட்டுள்ளாராம் வெற்றிமாறன்.

இதையும் படிங்கள் : 22 வருட பகையை தீர்த்து கொள்வாரா அஜித்.?! விக்னேஷ் செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.!

vijay2_cine

இன்னும் படம் முடிவடைந்தபாடில்லை என எல்லாரையும் முகம் சுழிக்க வைக்கிறதாம் வெற்றிமாறனின் செயல். இதையறிந்த விஜய்சேதுபதி 30 நாள் எதுக்கு இன்னும் கூடுதலாக 10 நாளும் சேர்த்து தருகிறேன். படத்தை எப்படியாவது முடித்து விடுங்கள் என கூறியிருக்கிறாராம் விஜய் சேதுபதி.

vijay3_cine

இதையும் படிங்கள் : எங்க அம்மா இருக்கும் போதே அந்த நபர் என்னை கட்டிப்பிடித்தார்.! பகீர் கிளப்பிய சின்மயி.!

இதற்கிடையில் டிசம்பருக்குள் படத்தை முடித்து 3 மாதம் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளுக்காக ஒதுக்கி ஏப்ரலில் எப்படியாவது முழு படத்தையும் தந்து விடுவதாக தயாரிப்பாளருக்கு உத்திரவாதம் அளித்திருக்கிறார் வெற்றிமாறன். டிசம்பர் என்பதை இந்த ஆண்டு சொன்னாரா இல்லை அடுத்த ஆண்டு சொன்னாரா என கோடம்பாக்கத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.