Connect with us

Cinema News

ஓணம் பண்டிகை கொண்டாடியது போல இருக்கு!.. கேரள ரசிகர்களுக்கு பெரிய ஐஸா வைத்த விஜய்!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஷெட்யூல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. புற்றுக்குள் இருந்து கிளம்பிய எறும்பாக ரசிகர்கள் சாரை சாரையாக விஜய்யை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என கிளம்பி வருகின்றனர்.

தியேட்டரில் விஜய் படங்களை பார்க்கத்தான் கேரள ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக செல்வார்கள் என்று பார்த்தால் பல ஊர்களில் இருந்து திருவனந்தபுரத்துக்கு டிக்கெட் போட்டு வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க:  இந்த பாட்டுக்கு இதுதான் சார் அர்த்தம்!. ரஜினிக்கே விபூதி அடித்த சுந்தர் சி!.. அடங்கோ!..

சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் எப்படி ரசிகர்களை நடிகர் விஜய் கேரவன் மீது ஏறி சந்தித்தாரோ தற்போது அதைவிட ஒரு படி மேலே சென்று கேரள ரசிகர்களுடன் பேசியிருக்கிறார் விஜய். அதுவும் மலையாளத்திலேயே விஜய் சில வார்த்தைகள் பேசியது கேரள ரசிகர்களை உச்சகட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பெரிய பஸ் மீது ஏறி நின்ற நடிகர் விஜய் கையில் மைக் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எப்படி என் நண்பா நண்பிகளை சந்திக்கும் போது மகிழ்ச்சியாக இருக்குமோ அதே அளவுக்கு உங்களை சந்திக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

இதையும் படிங்க: லால்சலாம் படம் தோல்விக்கு காரணமே அப்பாதான்!.. பகீர் பேட்டி கொடுத்த ஐஸ்வர்யா!..

ஓணம் பண்டிகையின் போது நீங்க எல்லாம் எப்படி கொண்டாட்ட மனநிலையில் இருப்பீங்களோ இப்போ உங்களை பார்த்ததும் நான் அந்த மனநிலையில் இருக்கிறேன் என விஜய் ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் கூச்சலிட்டும் விசிலடித்தும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

கேரளாவில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருக்கும் வரை தினமும் இப்படி ரசிகர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தளவுக்கு கூட்டத்தை பார்த்தால் கேரளாவில் ஒரு தொகுதியில் நின்றால் கூட விஜய் வெற்றி பெறுவார் என சோஷியல் மீடியாவில் பலரும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top