எப்போதும் முன்னணி ஹீரோக்களை வைத்து படமெடுத்தால், அந்த இயக்குனருக்கு அந்த படம் பிளாப் ஆனால், கூட அடுத்ததாக இரண்டாம் கட்ட ஹீரோக்களை வைத்து படமெடுக்கவாது வாய்ப்பு கிடைக்கும். ஆனால், சிலருக்கு அந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. முன்னணி ஹீரோக்களை வைத்து படமெடுத்தாலும் அடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
அப்படி விஜயை வைத்து படமெடுத்த சில இயக்குனர்கள் அந்த படம் பிளாப் ஆகிவிட்டால், அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்றே கூறலாம். வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களே கூறினால் தான் உண்டு.
இதையும் படியுங்களேன் – என் ரேஞ்சே இப்போ வேற.! இந்த நாட்டில் தான் கதை எழுதுவேன்.! நொந்து போன கமல்.!
விஜயை வைத்து புலி எனும் பேண்டஸி தீரைப்படத்தை இயக்கிய சிம்புதேவன் அடுத்ததாக இன்னும் தியேட்டருக்கு ஒரு படம் இயக்கவில்லை என்பதே உண்மை. இடையில் கசடதபற எனும் ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றை இயக்கி OTT தளத்தில் வெளியிட்டார்.
அதனை அடுத்து பெரிய ஹீரோ அல்லது வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் படம் செய்வார் என நினைக்கையில், காமெடி நடிகர் யோகிபாபுவை வைத்து படம் இயக்க உள்ளாராம். அதற்கான கதை விவாதம், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் லாரல்…
Coolie: ரஜினிகாந்தின்…
குடும்பத்திலும், உறவினர்களிலும்…
GoatMovie: விஜய்…
திருவிளையாடல் புராணத்தில்…