Vignesh Shivan: போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். முதல் படம் ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும் நானும் ரௌடிதான் படம் தான் அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. படமுழுக்க காமெடியை அள்ளி விசியிருப்பார்.
இந்தப் படத்தின் மூலம் தான் நயன்தாராவுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாகி இன்று இருவரும் தம்பதிகளாக மாறியிருக்கிறார்கள். இவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் நயன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ரைட்டு! தக் லைஃபில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை! திரிஷா ஆசையில மண்ணப்போட்டீங்களேப்பா!
சமீபத்தில் கூட அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பல விமர்சனங்கள் நயன்தாராவை பற்றி முன்வைத்தாலும் அதை எதையும் அவர் கண்டுகொள்வதே இல்லை. விஜயகாந்த் இறப்பிற்கு கூட அவர் அஞ்சலி செலுத்தப் போகவில்லை.
ஏன் அவர் நினைவிடத்திற்கு கூட இன்னும் அவர் போய் பார்க்கவில்லை. ஆனால் அதன் பிறகு நடந்த கலைஞர் விழாவில் கலந்து கொண்டார். இன்று சேலத்தில் நடக்கும் ஒரு தனியார் கல்லூரி விழா ஒன்றிற்கும் தன் கணவருடன் ஆஜராகியிருக்கிறார் நயன்தாரா. அவரின் ஃபெமினைன் ப்ராடக்ட் சம்பந்தமான பெண்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பாக நடத்தப்பட்ட அந்த விழாவிற்கு விஜய் டிவி புகழ் கோபிநாத்தும் சென்றிருந்தார்.
இதையும் படிங்க: ஊருக்கே தெரிந்த விஷயம் உனக்கு தெரியாதா? கருணாநிதியின் ரகசியத்தை மனைவியிடம் போட்டுக்கொடுத்த மனோரமா
அப்போது பேசிய கோபிநாத் ‘நானும் ரௌடிதான் படத்தில் வாய் பேசமுடியாத தன் மகளான நயன் குளித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய அப்பா சானிட்டரி நாப்கினை வெளியே வைத்துவிட்டு போவதும் அதை மிகவும் சங்கோஜப்பட்டுக் கொண்டு நயன் எடுப்பதும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
இனி அடுத்த படத்தில் ‘அப்பா எனக்கு சானிட்டரி நாப்கின் வேண்டும்’ என வாய் திறந்து கேட்கும் படி டையலாக்குடன் வையுங்கள். இனி காலம் அப்படித்தான் மாற வேண்டும் என கோபிநாத் கூறினார்.
இதையும் படிங்க: கமலுடன் நடிக்கும்போது கதறி அழுதேன்.. சினிமாவே வேண்டாம் என போய்விட நினைத்த சில்க் ஸ்மிதா…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…