Connect with us

latest news

ராமமூர்த்திக்கு இறுதி மரியாதை… ரோகிணியின் அடுத்த பிளான்… சமாதானமான கோமதி!..

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் வீட்டில் வந்து ரோகிணி அம்மாவிடம் பேசியதை அண்ணாமலையிடம் முத்து மற்றும் மீனா சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது விஜயா வர அமைதியாகி விடுகின்றனர். பின்னர் தத்தெடுக்க போவதாக சொல்ல ரோகிணி அதை ஒட்டுக்கேட்கிறார்.

பின்னர் விஜயாவிடம் வந்து இதை போட்டுக்கொடுக்க அவரோ அப்படி எடுத்துட்டு வந்தா அந்த சாக்கையே வச்சு வெளிய அனுப்பிடலாம் எனக் கூறிவிடுகிறார். இது சரிப்படாது என முடிவெடுத்த ரோகிணி உடனே கிரிஷுக்கு சென்னையில் ஸ்கூல் தேடுகிறார். அதுகுறித்து ஒரு ஸ்கூலையும் போய் பார்க்கிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொற்ப கோடிகள்தான் கோட் வசூல்… விஜய் கேரியரின் மோசமான ரெக்கார்ட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா மற்றும் ராஜி வருத்தமுடன் இருக்கின்றனர். வீட்டில் யாரும் பேசாமல் இருக்க தூங்காமல் கவலையாக உள்ளனர். காலையில் கோமதி மயிலிடம் காபியை மாமாக்கிட்ட கொடுத்துடு என தண்ணி எடுக்க போகிறார். மயிலும் ரூமுக்கு செல்கிறார்.

VijayTv

அப்போ பாண்டியன் வர அவருக்கு காபியை ராஜி எடுத்து வந்து கொடுக்க கடுப்பாகி விடுகிறார். கோமதியை அழைத்து சத்தம் போடுகிறார். இதையடுத்து மீனா கடுப்பாகி ஏன் இப்படி இருக்கீங்க? நாங்க இனி எந்த தப்பும் பண்ணலை என்கிறார். இல்ல வீட்டை விட்டு ஹாஸ்டலில் போய் இருந்துக்கவா என்கிறார். தங்கமயில் சமாதானம் செய்து மூவரையும் பேச வைக்கிறார்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு! ஈகோ இல்லாத ஆளுப்பா

பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தியை குளிக்க வைத்து இறுதி மரியாதை செய்கின்றனர். அவர் உடலை தகன மேடைக்கு எடுத்து செல்ல புறப்படுகின்றனர். குடும்பமே கதறி அழுகின்றனர். சுடுகாட்டில் பாக்கியா அவருக்கு பிள்ளை செய்ய வேண்டியதை மகளாக இருந்து கொள்ளி வைக்கிறார். கோபி அழுதுக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top