விஜய் டிவியின் தற்போதைய பிரபல சீரியல்கள் என அனைத்துமே தற்போது ரூட்டை மாற்றி பூமர் லெவல் காட்சிகளுடன் ரசிகர்களை கடுப்பேற்றி கொண்டு இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் ஓஜி எனக் கூறப்படுவது சன் டிவியை தான். இவர்கள் சீரியல் பொதுவாக மெகா தொடர் என சொல்வதற்கு ஏற்ப பல ஆண்டுகள் ஓடும். குறைந்தது ஒரு காட்சி 1 மாசம் வரை எடுத்த கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே.
இருந்தும் பொழுது போகாமல் இன்னும் அதை பார்க்கும் கூட்டம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இதற்கு மாறாக பரபரப்பாக காட்சிகள் எடுத்து சீரியலை அறிமுகம் செய்தது விஜய் டிவி. இதனால் பல இளசுகள் விஜய் டிவி பக்கம் தாவினர்.
அந்த வகையில் விஜய் டிவியின் ஒரிஜினல் சீரியல் தயாரிப்பு அதிகரித்தது. ஆனால் என்ன புயல் அடித்ததோ அவர்கள் மீண்டும் சன் டிவி லாஜிக்கையே கையில் எடுத்து இருக்கின்றனர். தற்போது டாப்பில் இருக்கும் சிறகடிக்க ஆசையில் ரோகிணி ஒருவழியாக மாட்டிக்கொண்டார்.
ஆனால், அவர் கதை இன்னும் முடியவில்லை. விவாகரத்துக்கு அவர் செய்யும் கூத்து காமெடியாக இருக்கிறது. வில்லியை காப்பாற்ற லாஜிக்கே இல்லாமல் சில கதைகள் நடக்கிறது. டிஆர்பிக்கு ஆசைலாம் படாதீங்க என்ற ரீதியில் கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸிலும் போர் அடிக்கும் கதை களமே சென்று கொண்டு இருக்கிறது. எதோ கடைக்கு போறேன் என்ற ரீதியில் டைரக்ட் செய்து வருகின்றனர் போல. இதில் ட்விஸ்ட்டே மகாநதி தான்! பெரும்பாலும் ப்ரவீன் பென்னட் இயக்கத்தில் வரும் கதையில் ஜோடிகளுக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும்.
ஆனால் அதை சேரவே விடாமல் கொடுமை பண்ணி வைப்பார். அந்த ஒரே கதைகளத்தை கொண்டே மொத்த சீரியலும் நகரும். அந்த வகையில் தற்போது விஜயிற்கு காவேரி இருப்பது தெரிந்து வந்துவிட்டார். காவேரிக்கு இன்னும் நியாபகம் வரவில்லை.
இன்னும் கொஞ்ச காலம் இவர்கள் மீண்டும் சேர கதை போகும். சேர்ந்தால் பிரிக்க ஆயத்தம் ஆவார். வேற கதையே இல்லையா பாஸ் எனக் கடுப்பாகலாம். மற்ற சீரியல்கள் சொல்லிக்கொள்ளும் நிலை கூட இல்லை. டிஜிட்டல் எராவில் அப்டேட் ஆகுங்க பாஸ்!
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…