Connect with us

latest news

ராமமூர்த்தியை நினைத்து புலம்பும் ஈஸ்வரி… திமிரா போச்சு விஜயா.. இன்னுமா ராஜியை வச்சு செய்றீங்க?

VijayTv: பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தினர் அழுது கொண்டிருக்கிறார். ஈஸ்வரி செழியனிடம் ராமமூர்த்தியை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். வீட்டிற்கு வரும் கோபி ராதிகாவிடம் தன்னுடைய நிலையை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

எனக்கு சாகுற வரைக்கும் இதை நினைச்சு உருட்டிக்கிட்டே இருக்கு அளவு தண்டனை கொடுத்துட்டாங்க என்கிறார். ஆனால் என்னுடைய எதிரி பாக்கியாதான். அவளை நான் சும்மா விட மாட்டேன் என்கிறார். ராதிகா கோபியை சமாதானம் செய்கிறார். பின்னர் ராமமூர்த்தி திருமணம் முடிந்த போது ஈஸ்வரிடம் சொன்னதை பாக்கியாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: OTT-க்கு வரும் GOAT… ரன் டைம் ‘இத்தனை’ மணி நேரமா?

சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜிற்கு ஷோரூமில் வந்து ஒருவர் லெட்டர் ஒன்றை கொடுக்கிறார். அதை அவர் பிரித்துப் பார்க்க உங்க அம்மாவிற்கு மாரடைப்பு வரும். தம்பி கொலைகாரன் ஆவான். நீ தற்கொலை செய்து கொள்வாய் என எழுதி இருக்கிறது. இதை பார்த்த மனோஜ் அந்த நபரை தேடி ஓடுகிறார்.

Pandian stores2

விஜயா எனக்கு சூடா சாப்பிட்டா தான் பிடிக்கும் எனக் கூறி மீனாவை சாப்பாடு எடுத்து வரக் கூறுகிறார்.  மீனா மற்றும் ஸ்ருதி சிரித்து பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் அண்ணாமலை விஜயா என குரல் கொடுத்ததும் இருவரும் சண்டை போடுகின்றனர். இதை பார்த்து அண்ணாமலை சிரிக்கிறார். மீனா சென்றதும்  ஸ்ருதி ஆன்ட்டி ஏன் இப்படி மீனா கஷ்டப்படுத்துறாங்க எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க: இப்படிச் சூடு… வேட்டையன் மனசிலாயோ சிங்கிள்… மலேசியா வாசுதேவன் வாய்ஸ் கொண்டு வந்த காரணம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கோமதி மற்றும் மீனா, ராஜியை  சேர்த்து வைத்ததாக தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் நீயே சேர்த்து வைத்த இன்னும் சண்டையை மூட்டி விட்டு பிரிச்சு வச்சிருக்க வேண்டியது தானே என்கிறார். முத்துவேல் வீட்டில் நகை பிரச்சினையை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ராஜி மற்றும் மீனா இருவரும் கோமதியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர் நீ எதை பற்றியும் யோசிக்காமல் படிக்கிற வேலை மட்டும் பாரு என்கிறார். அலுவலகத்தில் இருக்கும் மீனா செந்தில் பேசாமல் இருப்பதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து யோசித்துக் கொண்டிருக்கிறார். 

google news
Continue Reading

More in latest news

To Top