More
Categories: Cinema History Cinema News latest news

விஜயகாந்த் மாதிரி ஒரு மனுஷன பார்த்ததே இல்ல… சீக்ரெட் சம்பவத்தை உளறிய அந்த தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் என இரு பெரும் ஜாம்பவான்கள் இருந்த காலகட்டத்தில் தனக்கென தனி பாணி அமைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மிரளவைத்தவர் விஜயகாந்த்.

Advertising
Advertising

அது மட்டுமில்லாமல், அவர் யார் உதவி கேட்டாலும் செய்வார். மிகவும் தைரியசாலி, அவர் வீட்டுக்கு போனால் சாப்பாடு நிச்சயம் என அவரை நன்கு அறிந்தவர்கள் புகழ்ந்து தள்ளிவிடுவர்.

அப்படி அவரை பற்றிய ஒரு சம்பவத்தை அண்மையில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்த கோவை தம்பி பகிர்ந்து கொண்டார். 1988ஆம் ஆண்டு இவர் விஜயகாந்தை வைத்து உழைத்து வாழ வேண்டும் . விஜயகாந்த், ஹீரோ, ராதிகா ஹீரோயின்.

அமீர்ஜான் என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தோல்வியை தழுவியது. அதனால் தயாரிப்பாளருக்கு போதிய வருமானம் இல்லையாம். அந்த படத்திற்கு சுமார் 7 லட்சம் சம்பளம் விஜயகாந்திற்கு கொடுக்க வேண்டி இருந்ததாம்.

இதையும் படியுங்களேன் – தளபதி விஜய் 17 முறை.! சிவகார்த்திகேயன் 15 முறை.! யாரு பெருசுனு அடிச்சி காட்டு.!

அதனை வாங்க விஜயகாந்த் நெருங்கிய நண்பர் இப்ராஹிம் வந்தாராம். அவரிடம் படம் சரியாக போகவில்லை. அதனால் தற்போது பணம் இல்லை என கூறினாராம். உடனே அவரிடம் (விஜயகாந்திடம்) சொல்கிறேன். என இப்ராஹிம் கிளம்பிட்டாராம். அதன் பிறகு அந்த சம்பள பணத்தை கேட்கவே இல்லையாம் விஜயகாந்த். அப்படிப்பட்ட நல்ல மனிதர் விஜயகாந்த். அவரை போன்ற ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை என புகழ்ந்து தள்ளிவிட்டார் தயாரிப்பாளர் கோவை தம்பி .

Published by
Manikandan

Recent Posts