Connect with us

Cinema News

ஒரு தடவ கேப்டனை பார்த்தா போதும்…நான் செத்துடுவேன்…முரட்டு வில்லனின் நெகிழ்ச்சி பதிவு…

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நல்ல நடிகர், யார் என்ன உதவி கேட்டாலும் அதனை உடனே செய்யும் நல்ல மனிதர், இவர் வீட்டுக்கு சென்றால் எப்போதும் வயிறு நிரம்பி திரும்பி வருவோம் என நம்பிக்கை ஊட்டிய நல்ல மனிதர் என்று பல உதாரணங்களை இவர் மீது கூறலாம். அவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

இவர் செய்த உதவிகளையும் நல்லதுகளையும் சேகரித்தால் ஒரு புத்தகம் பத்தாது அந்த அளவுக்கு இவர் பலருக்கு தனது உதவிகளை செய்துள்ளார். இவர் ஆரம்பகட்டத்தில் இருந்தபோது இவருடன் ரசிகர் மன்றம் , நலத்திட்டங்கள் என்று பணியாற்றியவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.

விஜயகாந்த் படங்களில் பெரும்பாலும் வில்லனாக நடித்தும் இருப்பார் இவர். ஆனால், தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். சில ஆபரேஷன்களும் இவர் உடம்பில் நடந்துள்ளது.

இதையும் படியுங்களேன் – இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்… கோடி கோடியாய் கொட்டினாலும் இந்த கடன் தீராது…

இவர் விஜயகாந்துடனான,  தனது அனுபவத்தை அண்மையில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். அதாவது நான் விஜயகாந்த் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன். அவர் எனக்கு எண்ணற்ற உதவிகளை செய்துள்ளார். எனக்கு உடல்நிலை மிகவும் சரியில்லை நான் ஒரு முறை விஜயகாந்த்-ஐ பார்த்தேன் என்றால் அடுத்த நிமிடம் இறந்து விடுவேன்.

நான் கம்பீரமாக பார்த்த ஒரு மனிதனை இப்படி உடல் நலம் சரி இல்லாமல் பார்க்க முடியவில்லை. என்று மிகவும் நெகிழ்ச்சியாக தனது ஆஸ்தான நடிகர் தலைவர் விஜயகாந்த் பற்றி குறிப்பிட்டிருந்தார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top