விஜயகாந்துக்கு சிகிச்சை ஓவர்!.. மருத்துவமனை அப்டேட் இதோ!.. இதத்தான் எதிர்பார்த்தோம்!..

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குணமாகி விரைவில் வீடு திரும்ப உள்ளதாக மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது.

மிக்ஜாம் புயல் ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து மருத்துவமனையில் ஒரு வாரத்துக்கும் மேல் தீவிர சிகிச்சை பிரிவில் விஜயகாந்த் இருந்து வந்த நிலையில், தேவையில்லாத வதந்திகள் தொடர்ந்து பரவி வந்தன.

இதையும் படிங்க: கையில கத்தி!.. மனசுல கெட்ட புத்தி.. நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுங்க கமல்.. கொதிக்கும் ரசிகர்கள்!..

இந்த இக்கட்டான சூழலிலும் சில யூடியூபர்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்த நிலையில், கடுப்பான பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து விஜயகாந்த் நலமுடன் உள்ளார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேவையான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

நடிகர் சூர்யா, சரத்குமார், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கேப்டன் விஜயகாந்த் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர். மேலும், விஜய்காந்த் குணமடைய வேண்டும் என்றும் பழைய பன்னீர் செல்வமாக வர வேண்டும் என்றும் பொது மக்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இதையும் படிங்க: நடிக்க வரலைன்னா இன்னா சாரே!.. படுக்கைக்கு வரேனே.. பிட்டு போட நடிகைக்கு என்ன ஆச்சு தெரியுமா?

இந்நிலையில், அந்த பிரார்த்தனைக்கு எல்லாம் பலனளிக்கும் விதமாக விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் இருந்து குணமடைந்து விட்டார் என்றும் ஒரு சில தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என தகவல் ரசிகர்களையும் தேமுதிக தொண்டர்களையும் தமிழ் திரையுலக பிரபலங்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தனது கணவர் மீண்டும் குணமடைந்த நிலையில் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

 

Related Articles

Next Story