More
Categories: Cinema News latest news

விஜயகாந்தின் நிலை திட்டமிட்டு நடந்ததே… அப்போ புரியல.. இப்போ தான் தெரியுது.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்..!

Vijayakanth: தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்தை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் கொண்டாடுவதற்கு ஒரே காரணம் அவரின் அந்த குணம் தான். இதுவரை அவரிடம் உதவி கேட்டு சென்ற யாரையுமே அவர் கைவிட்டதாக தகவல்கள் இல்லை. ஆனால் அப்படிப்பட்டவருக்கே பின்னால் ஒரு குழி பறிப்பு சம்பவமும் நடந்து இருக்கிறது. 

எம்.ஜி.ஆருக்கு பின்னால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மக்களை சேகரித்தவர். உச்ச நட்சத்திரங்கள் என யாரை சொல்லிக்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் இழப்பு சாதாரண மக்களை கூட பாதிக்கிறது என்றால் அவர் தான் தலைவர். இன்று அப்படி ஒரு மனநிலையில் தான் எல்லாரையும் விட்டு சென்று இருக்கிறார் விஜயகாந்த்.

Advertising
Advertising

இதையும் படிங்க…. படப்பிடிப்பில் விஜயகாந்த் செய்த அந்த விஷயம்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்.. இப்படி ஒரு மனுஷனா!..

விஜயகாந்த் அரசியலுக்கு வரும் போது பலரும் கேலி பேசினர். அப்போது ராஜ்ஜியம் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த நேரத்தில் தான் தேமுதிக கட்சியை அறிமுகப்படுத்த இருந்தார். பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது கூட பொய் சொல்ல தெரியாமல் மாட்டிக்கொண்டார். 

அத்தனை வெகுளியான ஆள். அவர் கட்சி அறிவிக்கப்பட்ட போது கூட பலரும் இவருக்கு என்ன அரசியல் தெரியும். நடிகர் சங்க கடனை அடைத்துவிட்டால் இவர் பெரியவரா? எனப் பேசினர். ஆனால் முதல் மாநாட்டை கூட்டி விருத்தாச்சலம் தொகுதியில் வென்ற போது தான் இவருக்கு பின்னும் ஒரு கூட்டம் இருப்பதாக நம்பினர்.

இதையும் படிங்க…. 112 டூ 315.. அசைக்க முடியாத சாதனைகளை செய்த மக்கள் இமயம்.. விஜயகாந்தின் சூப்பர்டூப்பர் ஹிட் படங்கள் இத்தனையா?

மேலும், அவர் சடாரென கோபப்படும் ஆள். அதை அவரின் எதிரி கூட்டம் பயன்படுத்தியே அவரின் இமேஜை காலி செய்தது. மேலும் அவரை குடிக்காரர் என சொல்லி சொல்லியே இன்று இல்லாமலே போய்விட்டார். இன்றைய காலத்தில் அவர் நல்ல உடல்நிலையோடு இருந்து இருந்தால் அவர் முதல்வர் ஆகி இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை எனவும் குறிப்பிட்டார்.

Published by
Akhilan

Recent Posts