More
Categories: Cinema News latest news

பூதாகரமாக கிளம்பிய விக்கி- நயன் விவகாரம்!…சுகாதாரத்துறை அமைச்சர் எடுத்த அதிரடியான முடிவு!…

ஒரே ஒரு ட்விட் தான். இன்று பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது விக்னேஷ் சிவன் – நயன்தாரா விஷயத்தில். குழந்தைகளோடு மகிழ்ச்சியை பகிர்ந்த ஒரு நாள் அதை தொடந்து பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

Advertising
Advertising

திருமணமாகி 5 வருடங்கள் ஆகவேண்டும், கணவன் மனைவிக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சினை இந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்களே கடந்த நிலையில் இது எப்படி சாத்தியமாகும் என பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : சட்டத்தை மீறி குழந்தை!..புதிய சர்ச்சையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்!..நடந்தது என்ன?…

மேலும் இந்த பிரச்சினையால் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர் நயனும் விக்கியும். மேலும் 21 வயதில் இருந்து 36 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே கருமுட்டைகளை விற்க முடியும். மருத்துவத்திற்குட்பட்ட விதிமுறைகளை பின்பற்றியுள்ளனரா என்று விசாரிக்க மருத்துவ குழுவை அனுப்பி விசாரிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விதிகளை மீறி ஏதேனும் பின்பற்றியிருந்தால் அவர்களை விசாரிக்கவும் உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார். இதில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் எந்த மாதிரியான கருத்துக்களை தெரிவிக்க போகின்றனர் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
Rohini