படத்துக்கு போட்ட உழைப்பை விட ரிலீஸுக்கு விக்ரம் செஞ்ச உதவி.. பிரச்சினை ஓஞ்சிருச்சுப்பா

vikram 2
இன்று மாலை 6:00 மணிக்கு வீரதீர சூரன் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகும் என்ற ஒரு செய்தி தான் இப்போது விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீரதீர சூரன். இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதுரையை மையமாக வைத்து இந்த படம் ஒரே நாள் இரவில் உருவான கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது .முழு நீள ஆக்க்ஷன் படமாகவும் இந்த படம் உருவாகி இருக்கிறது.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பக்கா கமர்சியல் படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதுவரை பலவித கெட்டப்புகளை போட்டுக்கொண்டு கதையை சரியாக தேர்ந்தெடுக்காமல் நடித்து வந்த விக்ரமுக்கு இந்த படம் ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என ஆரம்பத்திலிருந்து ஒரு கருத்து இருந்து வந்தது. அதற்கேற்ற வகையில் படத்தின் கதைக்களமும் சரியாக அமைந்தது.ஏற்கனவே சித்தா படம் எப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட படமாக இருந்தது என அனைவருக்கும் தெரியும்.
அப்படிப்பட்ட படத்தை கொடுத்த இயக்குனர் தான் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார். அதனால் அந்த ஒரு எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மீது இருந்தது. ஆனால் இன்று ரிலீஸ் ஆக இருந்த திரைப்படம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. சில பல ஃபைனான்ஸ் பிரச்சனையால் இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசில் விக்ரம் தயாரிப்பாளருக்கு உதவி செய்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது .சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை விக்ரம் தயாரிப்பாளருக்கு கொடுத்து உதவி செய்திருக்கிறாராம்.
அதனால் ஏதோ படத்தின் பிரச்சனை ஓரளவு தீர்ந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் நேற்று அவர் வெளியிட்ட வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். படம் நன்றாக இருக்கிறது. அதை நானே சொல்லக்கூடாது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு .இருந்தாலும் படத்திற்கு பின்னாடி வேலை செய்தவர்கள் இந்த படத்தை பற்றி கூறினால் நன்றாக இருக்கும் என படத்தின் டெக்னீசியன்கள் படத்தை பற்றி கூறியிருந்தார்கள்.
இதுவரை ஒரு படம் வெளியாகிறது என்றால் அதற்குப் பின்னணியில் எத்தனையோ ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களின் முகம் யாருக்கும் தெரியாது. ஆனால் விக்ரம் வெளியிட்ட இந்த வீடியோவால் யார் யாரெல்லாம் இந்த படத்திற்கு பின்னணியில் வேலை பார்த்து இருக்கிறார்கள் என்பது நேற்று தெரிந்தது. இது ஒரு நல்ல விஷயம் என்றும் கோடம்பாக்கத்தில் இதைப் பற்றி பெரிய அளவில் பேசி வருகிறார்கள்.
இன்னொரு விஷயம் இந்த படத்திற்காக விக்ரம் பல வகைகளில் பிரமோஷன் செய்திருந்தார். அவர் பொதுவாகவே அவருடைய படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே படம் ஆரம்பத்திலிருந்து ரிலீஸ் ஆகும் வரை அவருடைய உழைப்பு கடுமையாக இருக்கும். அதே மாதிரி தான் இந்த படத்திற்கும் எல்லா ஊர்களுக்கும் சென்று படத்தை பெரிய அளவில் ப்ரோமோட் செய்திருந்தார். அதனால் இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் என அனைத்து ரசிகர்களும் கேட்டுக் கொள்கின்றனர்