Cinema News
பொன்னியின் செல்வன் ரிலீஸ்-க்கு முன் இத செஞ்சே ஆகனும்…விக்ரமின் அதிரடியான முடிவு…
Published on
By
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் உட்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து இசை வெளியீட்டு விழா வரைக்கும் அனைத்து வேலைகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர். இசைவெளியீட்டு விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தை காண ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் விக்ரம் இன்று அவரது ட்விட்டர் பதிவில் பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வருவதற்கு முன் நாம் இதை செய்யவேண்டும் என திரிஷா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது நான் தஞ்சைக்கு போக இருக்கிறேன். நம் புலிக்கொடி நாடெங்கும் பறப்பதற்கு முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? அதனால் தான் போகிறேன். குந்தவை வருகிறாயா? வந்தியத்தேவனும் வருகிறான். வரும் போது அருள்மொழியையும் அழைத்து வா என ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இசையமைப்பாளராக இருந்து நடிகர் மற்றும் தயாரிப்பாளராக மாறியவர் விஜய் ஆண்டனி. விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். நான்...
இந்த ஆண்டு மலையாள சினிமாவுக்கு பொன்னான ஆண்டு என்று சொல்லலாம். வெளியாகும் ஒவ்வொரு படங்களும் 50 கோடி, 100 கோடி, 200...
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி விட்டு சென்றனர். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும்...
MGR Jayalalitha: புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாகவே வெளியாகியிருக்கின்றன....
தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் சிவாஜிக்கு ஈடு, இணை என எந்த நடிகர்களும் இல்லை. ஆனால் அவர்களுக்கு இணையான 2 நடிகைகள்...