More
Categories: Cinema News latest news

ஏன் நான் அத பண்ண கூடாதா.?! விபரீத முடிவு எடுத்துள்ள விஷால்.!

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு பெரிய வெற்றிக்காக தடுமாறி கொண்டிருக்கும் நடிகர்களில் முன்னணி வரிசையில் இருப்பவர் நடிகர் விஷால். அவர் படம் பெரிய ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் இரண்டு வருடம் கொரோனா. அதன் பிறகு வெளியான எனிமி மற்றும் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Advertising
Advertising

அதன் காரணமாக அடுத்தடுத்த திரைப்படங்களை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார் விஷால். அடுத்ததாக லத்தி எனும் திரைப்படமும் உருவாகி வருகிறது. அதனை தொடர்ந்து மார்க் ஆண்டனி எனும் திரைப்படம் அறிவிக்கப்பட்டது.

இதில் மார்க் ஆண்டனி திரைப்படம் விஷால் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை தமிழ் , தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு போஸ்டர் வெளியிட்டது.

படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, AAA  படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படம் டிராப் என கூறப்பட்டு வந்தது. அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பாளர் இப்படம் இன்னும் டிராப் செய்யபடவில்லை விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்.

இப்படம் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதைக்களம் ஆகும். விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளனராம். விஷால் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.

இதையும் படியுங்களேன் – அந்த மனசு அஜித்துக்கு மட்டும் தான் வரும்.! ரஜினிக்கு கூட அப்படி தோன்றுமா தெரியலையே.!

விஜய் இரட்டை வேடத்தில் நடித்த பிகில், மெர்சல், போன்ற திரைப்படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளன. அதேபோல அஜித் நடிப்பில் வெளியான இரட்டை வேட படங்களும் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளன. தனுஷ் கொடி எனும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.  விஷாலுக்கும் இந்த இரட்டை வேடம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
Manikandan

Recent Posts