ராமமூர்த்திக்கும் பாதி கொடுங்க!… வாங்குன சம்பளத்தை பங்கு போட்ட எம்.எஸ்.வி… இப்படியும் ஒரு மனுஷனா!…

தமிழ் சினிமாவில் தனது இசையால் அனைவரையும் மயக்கியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் பாடல்கள் அனைவரின் மனதிற்கு இதம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். இதன் காரணமாகவே இவரை மெல்லிசை மன்னன் எனவும் அழைத்தனர்.

இவர் மட்டுமல்லாமல் இவரின் நெருங்கிய தோழனாக திகழ்ந்தவர் ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தங்களது இசையால் கட்டி போட்டிருந்தனர் என கூறலாம். அந்த அளவுக்கு இவர்களின் இசை அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டிருந்தது.

இதையும் வாசிங்க:அந்தப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த அஜித்! படமோ ப்ளாக் பஸ்டர் ஹிட்

இருவரும் இணைந்து சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகினர். பின்னர் கர்ணன், மணி ஓசை போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் தங்களுக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கினர்.

இவர்களின் நட்பு இவர்களின் வாழ்நாள் இறுதி வரையிலும் நீடித்தது. என்னதான் சினிமாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக இருந்தாலும் அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் எனவே ஆசைப்பட்டார். ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார்.

இதையும் வாசிங்க:அக்காக்கு முன்னாடி தங்கைக்கு கல்யாணமா? சாய் பல்லவி தங்கை வெளியிட்ட ஷாக் வீடியோ!…

அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன். இப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனை நடிக்க வைத்தே ஆகவேண்டும் என இப்படத்தின் இயக்குனரான சரண் விருப்பப்பட்டார். ஆனால் முதலில் இப்படத்தில் நடிக்க எம்.எஸ்.வி சம்மதிக்கவில்லையாம். பின்னர் சரணின் தொடர் முயற்சியால் சம்மதித்துள்ளார்.

ஆனால் அப்படத்தில் நடிக்க சம்பளமாக 10 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார் விஸ்வநாதன். மேலும் அப்பணத்தில் அவருக்கு 5 லட்சமும் பின்னர் ராமமூர்த்திக்கு 5 லட்சம் என இயக்குனரிடம் கேட்டுள்ளார். உடனே சரண் நீங்க மட்டும்தானே இப்படத்தில் நடிக்கிறீர்கள்… அப்போ எதற்காக ராமமூர்த்திக்கு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு எம்.எஸ்.வி அவன் வேறு நான் வேறு அல்ல… நானும் அவனும் ஒன்றுதான் என கூறியுள்ளார். இப்படி இவர்களின் நட்பு அனைவருக்கும் உதாரணமாக இருந்துள்ளது.

இதையும் வாசிங்க:விஜயகாந்துக்கும் எனக்கும் திருமணம்!… ராதிகா சொன்ன அந்த விஷயம் நடக்காமல் போக காரணம் தெரியுமா?

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago