திடீர் ஹீரோவான விஜே சித்து.. இதற்கு பின்னணியில் இவ்ளோ விஷயம் இருக்கா?

by Rohini |   ( Updated:2025-05-06 04:28:53  )
siddhu
X

siddhu

VJ Siddhu: இன்று உலகமே இணையதளத்தை நம்பித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றது. என்றாவது உலகம் நின்று விடும் என்றால் அதற்கு ஒரு காரணமாக இருப்பது என்னவெனில் ஒட்டுமொத்த இணையமும் முடங்கி போகும் நேரத்தில்தான். அந்தளவுக்கு சமூக வலைதளங்களில்தான் ஒவ்வொருவரும் தனக்கான நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறான். அப்படி சமூக வலைதள மூலம் மிகவும் பிரபலமானவர்தான் விஜே சித்து.

இன்று அவர் ஒரு வீடியோ போடுகிறார் என்றால் வீடியோ போட்டு ஒரு நிமிடத்தில் மில்லியன் வியூவ்ஸ்களை தாண்டி அவருடைய வீடியோ பார்வையாளர்களை கடந்து விடுகிறது. அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜே சித்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுத்த படம் என்றால் டிராகன் திரைப்படம்தான்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரெங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் டிராகன். இந்தப் படத்தில் பிரதீப் ரெங்கநாதனுக்கு நண்பனாக படமுழுக்க அவருக்கு ஸ்கோப் கொடுத்திருப்பார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் சித்துவுக்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸை கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜே சித்துவே இயக்கி அதில் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு டயங்கரம் என்று தலைப்பு வைத்திருக்கின்றனர். இந்தப் படத்தை ஐசரி கணேஷ்தான் தயாரிக்கிறார். இந்த நிலையில் எப்படி விஜே சித்துவை இந்தப் படத்திற்குள் உள்ளே கொண்டுவந்தார் ஐசரி கணேஷ் என்ற கேள்விக்கு வலைப்பேச்சு பிஸ்மி அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். ஆர் ஜே பாலாஜியை ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகப்படுத்தியதே ஐசரி கணேஷ்தான்.

மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகத்திற்கு ஆர் ஜே பாலாஜி அவருடைய சம்பளத்தை அதிகரித்து கேட்டாராம். ஆனால் ஐசரி கணேஷ் அதற்கு சம்மதிக்கவில்லையாம். அதன் பிறகுதான் ஆர் ஜே பாலாஜி சூர்யாவை வைத்து படம் பண்ணப் போய்விட்டார். இதில் ஐசரி கணேஷுக்கு கொஞ்சம் வருத்தமாம். இன்னொரு பக்கம் பிரதீப் ரெங்கநாதனையும் அறிமுகப்படுத்தியது ஐசரி கணேஷ்தான்.

கோமாளி படம் வெற்றி அடுத்து லவ் டுடே படத்தில் நான்தான் ஹீரோ என சொல்ல அது சரி வராது என ஐசரி கணேஷ் மறுத்துவிட்டாராம். அதனால் பிரதீப் ரெங்கநாதன் ஏஜிஎஸ் பக்கம் சாய்ந்து விட்டார். இப்படி இந்த இரண்டு பேரும் தன்னை விட்டு போனது ஐசரி கணேஷுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அதனால்தான் ரேடியோவில் இருந்த ஆர் ஜே பாலாஜியை இங்கு கொண்டு வந்து பிரபலமாக்கினோமோ அப்படி வேறொரு ஃபீல்டில் இருக்கிறவரை கொண்டு வந்து ஹீரோவாக்க வேண்டும் என தேடும் போதுதான் சித்து கண்ணில் பட்டிருக்கிறார்.

dayangaram

ஆனால் நாளைக்கே டயங்கரம் பயங்கரமான வெற்றி பெற்று சித்துவும் அதிக சம்பளம் கேட்டு ஐசரி கணேஷ் கொடுக்க மறுத்தார் என்றால் அவரும் ஐசரி கணேஷை விட்டு போக வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என பிஸ்மி கூறியிருக்கிறார்.

Next Story