மோகன், பூர்ணிமா காதலுக்கு பாக்கியராஜ் இடைஞ்சலாக இருந்தாரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

தமிழ்த்திரை உலகில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். இவர் எந்தளவுக்கு புகழின் உச்சியில் இருந்தாரோ அந்தளவு திரைஉலகில் இருந்தும் காணாமல் போய்விட்டார். அதே நேரம் தற்போது மீண்டும் நானும் இருக்கிறேன் என்பது போல ‘ஹரா’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து தளபதியுடன் கோட் படத்திலும் நடித்து வருகிறார். இவரது காதல் எப்படிப்பட்டது? பூர்ணிமாவுடன் இருந்த அந்தக் காதலுக்கு பாக்கியராஜ் இடையூறாக இருந்தாரா என மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

பெங்களூருவுல ஒரு பேங்க்ல வேலை பார்த்தவர் தான் மைக் மோகன். அவரது இயற்பெயர் மோகன் ராவ். அப்போது பாலுமகேந்திராவின் கோகிலா படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணினார். அப்புறம் மூடுபனி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் தான் அவர் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை படங்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார். இந்தப் படங்களில் அவருக்கு ஜோடி பூர்ணிமா ஜெயராம். ராசியான ஜோடி என்று இவர்களைப் பற்றி திரையுலகில் அனைவரும் பேசினார்கள்.

அப்போது இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அவர்களுக்குள் காதலும் இருந்ததாம். ஒரு முறை பாக்கியராஜ் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். பெரும்பாலும் மோகன் பாம்குரோவ் ஹோட்டலில் தான் அவர் தங்கியிருப்பார்.

Kilinjalgal

அங்கு தான் படங்களோட டிஸ்கஷன் நடக்கும். அப்போ மோகனும், பூர்ணிமாவும் தோள் மேல கையைப் போட்டுக்கிட்டு ஓட்டல் வாசல்ல பேசிக்கிட்டு இருந்தாங்களாம். அதைப் பார்த்த பாக்கியராஜ் ‘என்ன கலி காலம்யா… ஹீரோயின் எல்லாம் இப்படி பேசுனா என்னாகறது?’ ன்னு பேசினாராம். மோகன் அப்போது யார் கூட நடிச்சாலும் படம் வெள்ளிவிழா தான். அதனால பூர்ணிமா அவரை விரும்பினார்.

ஆனால் மோகன் அந்தளவு விருப்பம் இல்லாமல் இருந்தார். அவர் சாதாரணமா ஒரு நடிகையிடம் பேசுவதைப் போலத் தான் பேசினார். அந்த ஒரு கோபம் பூர்ணிமாவுக்கு இருந்தாம். அதனால் அவருக்கு பெரிசா நோய் இருப்பதாக சொன்னதாகவும் அப்போது கிசுகிசுவாகப் பேசப்பட்டது. அதனால் தான் அவர் பழிவாங்கினார் என்றும் சொன்னார்கள். அந்த நேரத்தில் அவருக்கு வெள்ளி விழாவிற்கான படங்கள் குறைந்து போய் சின்ன சின்ன படங்களாக வர ஆரம்பித்தது.

கடைசியாக உருவம் என்ற படத்தில் கொடூரமான பேயாக நடித்து இருப்பார். தொடர்ந்து அவரது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அவர் சொந்தமாக 2 படங்கள் எடுத்தார். அதுவும் சரியாகப் போகலை.

இதையும் படிங்க… ஒரு வழியா முடிஞ்சுப்பா கல்யாணம்! இருந்தாலும் பிரேம்ஜி காலில் இத நோட் பண்ணீங்களா?

பாக்கியராஜ் தெலுங்கு நடிகை பிரவீனாவை முதலில் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததார். அதாவது கோமா நிலையில் இருந்துள்ளார். அவர் இறந்தும் போனார். ‘டார்லிங் டார்லிங்  டார்லிங்’ படத்தில் நடித்தார். அப்போது அவருக்கு ஜோடியாக நடித்த பூர்ணிமாவைக் காதலித்து 2வதாக திருமணம் செய்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

ராம் சுதன்

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

2 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

3 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

4 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

17 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

22 hours ago