---Advertisement---

கௌரவம் படத்தால் உயர்ந்து நின்ற சிவாஜி! கண்ணனாக நடித்ததன் ரகசியம்!

Published on: March 17, 2026
gowravam movie
---Advertisement---

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 3 வேடங்களில் நடித்துள்ளார். நவராத்திரி என்ற படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார். பார்க்குற எல்லாருக்கும் என்ன தோணும்னா படம் முழுவதும் தன்னை ஆக்கிரமிக்கணும்னு சிவாஜி நினைக்கிறாரோன்னு தோணும். சிவாஜியோடு பல படங்களில் நடித்தவர் ஏஆர்.எஸ். நாடகங்களிலும் நடித்துள்ளார். அவருடைய நாடகக்குழுவான UAA-யில் கண்ணன் வந்தான் என்ற நாடகம் தான் பின்னாளில் கவுரவம் படமானது.

அதில் பாரிஸ்டர் ரஜினிகாந்தாகவும் சிவாஜி நடித்து இருப்பார். அவரது மகனான கண்ணன் வேடத்திலும் சிவாஜி நடித்து இருப்பார். இதைப் பார்த்து விட்டு ஏஆர்எஸ், சிவாஜியிடம் நீங்க இந்த ரஜினிகாந்த் வேடத்தை மட்டும் பண்ணிட்டு, அந்தக் கண்ணன் வேடத்துக்கு வேற யாரையாவது போட்டுருக்கலாம் இல்லையான்னு கேட்டார். அதுக்கு சிவாஜி சொன்ன பதில் என்னை ஒரு அரைமணி நேரம் சிந்திக்க வைத்தது என்று சொல்கிறார் ஏஆர்எஸ்.

அதற்கு சிவாஜி என்ன பதில் சொன்னாருன்னு பாருங்க. பாரிஸ்டர் ரஜினிகாந்தோட ரோலை நான் பார்த்த உடனே படம் முழுக்க ஆக்கிரமிக்கிற ரோல்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். அதுல நான் மட்டும் கவனம் செலுத்தி நடிச்சிருந்தா, நிச்சயமா இந்தப் படம் பார்த்துட்டுப் போற எல்லா மக்களின் மனதிலும் அந்த பாரிஸ்டர் ரோல் மட்டும்தான் இருக்கும். கண்ணன் பாத்திரம் தெரியாமல் போயிருக்கும்.

அப்படிப்பட்ட பாத்திரத்துல ஒரு இளம் நடிகரைப் போட்டுட்டு எதுக்கு வீணடிக்கணும்? அதன் காரணமாகத்தான் அந்தப் பாத்திரத்தையும் நான் ஏற்று நடித்தேன் என்று ஏஆர்எஸ்.சுக்குப் பதில் சொன்னார் சிவாஜி. வெளியில இருந்து பார்க்குறவங்களுக்கு என்ன தோணும்? சிவாஜி எல்லா பாத்திரத்திலும் நடிக்கணும்னு நினைக்கிறாரு போல. அந்தப் பாத்திரத்தைக் கூட விட்டுக் கொடுக்கல என்பதாகத்தான் இருக்கும். ஆனா அதுக்குள்ள எப்படிப்பட்ட ஒரு நுட்பமான காரணம் இருந்ததுன்னு இப்பதானே தெரியுது.