Connect with us
maya

Biggboss Tamil 7

லட்சங்களை அள்ளிக் கொடுக்கும் பிக்பாஸ்! பணப்பொட்டியை தூக்கப் போகும் அந்த போட்டியாளர்?

BiggBoss Season 7: கிட்டத்தட்ட 90  நாள்களை கடந்து வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கேம் ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும்.

கடந்த வாரம் நிக்‌ஷன் மற்றும் ரவீனா வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா, மாயா, விஜய் வர்மா, விஷ்ணு ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் யார் அந்த டைட்டில் வின்னரை கைப்பற்றுவார் என்று யூகிக்க முடியாத படி கடுமையாக போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நியூ இயர் பார்ட்டியில் அத்துமீறிய நடிகர்!.. பாதி படம் முடிஞ்ச நிலையில் நடிகை என்ன பண்ணாரு தெரியுமா?

உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மக்களின் ஆதரவு அதிகமாகவே இருந்து வருகின்றனர். ஆனால் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா ஆகியோருக்குத்தான் அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதாக தெரிகிறது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கேற்ப என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவின் படி பணப்பொட்டி வருவதாக தெரிகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று இந்த பணப்பொட்டித்தான்.  ஆரம்பத்தில் அந்த பெட்டியில் ஒரு லட்சம் வைத்து அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க: ஒண்ணு கூடிட்டாங்கய்யா!.. வனிதா மகளுடன் கெட்டுகெதர் போட்டது யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க!

ஆனால் யாருமே அதை எடுக்க வில்லை. நேரம் ஆக ஆக 5 லட்சமாக அது உயர்ந்தது. இருந்தாலும் அந்த ஐந்து லட்சத்தை யாரும் எடுக்காமல் சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தினேஷ் அது பத்து லட்சமாக மாறட்டும். அதன் பின் பார்க்கலாம் என்ற் ஐடியாவில் இருக்கிறார்.

இதில் விசித்ரா ‘யாராவது எடுத்துக் கொண்டு போங்களேம்பா’ என்று சொல்கிறார். அதற்கு தினேஷ் ‘இந்த சீசனில் யாருமே பணப்பொட்டியை எடுக்க மாட்டார்கள்’என்று கூறுகிறார். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் ஒரு வேளை யாருமே எடுக்கவில்லை என்றால் மாயா எடுக்க வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: பாக்யராஜ் வில்லனாக நடித்த படம்… கையில் கிடைத்தால் கசாப் போட நினைத்த ரசிகர்கள்

ஏனெனில் ஆரம்பத்தில் மாயாவுக்கு பிரதீப்பிற்கும் இடையே முதலிடம் யாருக்கு என்ற டாஸ்க்கில் ஒரு வாக்கு வாதம் ஏற்பட்டது. அதில் மாயா பிரதீப்பிடம் ‘ நீ முதலிடம் வச்சுக்கோ. ஆனால் அதன் மூலம் வரும் காசை எனக்கு கொடுத்து விடு. என்னோட சமூதாயத்திற்கு தேவைப்படுகிறது’ என்று கூறியிருப்பார். அதனால் அவரை பொறுத்தவரைக்கும் பணம் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால் மாயா கண்டிப்பாக எடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஆனால் பொறுத்திருந்து என்ன நடக்கிறது என பார்ப்போம்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top