Connect with us
rajini

Cinema News

ஜெய்பீம் படத்தை இதுவரை பாராட்டாத ரஜினி… காரணம் இதுதானா?…

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கிய படங்களை எப்போதும் பாராட்டும் குணம் கொண்டவர். மாநாடு படத்தை கூட பார்த்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை செல்போனில் அழைத்து சில நிமிடம் அப்படத்தை பாராட்டி பேசியிருந்தார். இது அவர்களுக்கும் மாநாடு படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.

rajni

மாநாடு படம் மட்டுமல்ல. மக்கள் வரவேற்கப்பட்டு ஹிட் அடிக்கும் படங்களின் இயக்குனர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் ரஜினி. அவ்வளவு ஏன்? ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது தீவிர ரசிகர் என்பது தெரிந்து அவரை செல்போனில் அழைத்து படத்தை பாராட்டினார் ரஜினி. அதன்பின் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் அவர் பெயரும் இடம் பெறும் வரை அது சென்றது.

rajini

ஆனால், சூர்யா தயாரித்து நடித்து தமிழ் சினிமாவையே உலுக்கிய ஜெய்பீம் திரைப்படம் பற்றி இதுவரை அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அப்படத்தை பாராட்டாத சினிமா பிரபலங்களே இல்லை. ரசிகர்களும், விமர்சகர்களுக்கும் அப்படத்தை அப்படி கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால், அப்படத்தை பாராட்டி ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட் கூட போடவில்லை. கண்டிப்பாக ரஜினி பாராட்டுவார் என சூர்யா எதிர்பார்த்திருப்பார். ஆனால், அது நடக்கவில்லை.

ஜெய்பீம் மட்டும்தான் என்றில்லை. தாழ்ந்த சாதியினர் படும் பாடுகள் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி வெளியாகும் படங்கள் பற்றி ரஜினி எப்போதும் கருத்து தெரிவிப்பது இல்லை. உதாரணத்திற்கு அறம், பரியேறும் பெருமாள், மண்டேலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை ரஜினி பாராட்டவே இல்லை. அதேநேரம் சார்பட்டா பரம்பரை படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன். ஜெய்பீம் படத்தை அவர் பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டார்.

jaibhim

ஒரு மாநிலத்தின் முதல்வரே தனது வேலையை விட்டு அப்படத்தை பார்த்து பாராட்டி நீண்ட அறிக்கை வெளியிட்டார். மேலும், இருளர் மற்றும் குறவர் சமூகத்தினருக்கு அரசு சார்பில் உதவிகளை அளிக்கவும் அவர் முன் வந்தார். ஆனால், திரைத்துறையிலேயே இருக்கும் ரஜினி ஜெய்பீம் படம் பற்றி எங்கும் பேசவே இல்லை.

rajini

பாராட்டுவதும், பாராட்டாமல் இருப்பதும் ரஜினியின் சொந்த முடிவு என்றாலும் அவருக்குள் பாகுபாடு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர். அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவர் எப்போதும் பாஜக அபிமானிதான் அதனால், ஜெய்பீம் மாதிரியான படங்களை அவர் பாராட்டவில்லை என பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவரை ரஜினி ரசிகர்கள் வாய்க்கு வந்த படி திட்டி வந்தாலும்,

‘ஜெய்பீம்’ படத்தை ஏன் பாராட்டவில்லை என்கிற பதில் ரஜினியிடம்தான் இருக்கிறது..

google news
Continue Reading

More in Cinema News

To Top