More
Categories: Cinema News latest news tamil cinema gossips

இதுதான் 8வது அதிசயம்.! குடும்பத்துடன் திருமணத்தில் கலந்துகொண்ட அஜித்குமார்.!? காரணம் தெரியுமா.!

தமிழ் சினிமாவில் இளம் காதல் ஜோடியாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று முதல் திருமண பந்தத்திற்குள் நுழைந்து விட்டனர். இவர்களது திருமணம் இன்று சென்னை அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertising
Advertising

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் என பெரிய பெரிய விஐபிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களை திருமணத்திற்கு  அழைத்துள்ளனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்.

அதில் பலரும் இன்று காலை முதல் இவர்கள் திருமண வைபவத்திற்கு வந்து கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், போனிகபூர், கார்த்தி, விஜய் சேதுபதி, அனிருத்  என நட்சத்திர பட்டாளமே இந்த விழாவிற்கு வந்துள்ளது.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த திருமண விழாவிற்கு நடிகர் அஜித் குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்திருந்தார் என்ற செய்தி இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இதையும் படியுங்களேன் – இப்பதான் கமல்!…அஜித் இத எப்பவோ செஞ்சிட்டார்!…பிரபல இயக்குனர் பதிவு….

சமீப வருடங்களாக அஜித்குமார் இந்த மாதிரியான பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதே இல்லை. அதனை முற்றிலும் தவிர்த்து விடுவார். ஆனால், இந்த திருமண நிகழ்ச்சிக்கு அவர் கண்டிப்பாக வருவார். ஏனென்றால் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளார். நயன்தாரா அஜித்தின் நெருங்கிய நண்பர் அதன் காரணமாக அஜீத் இந்த திருமணத்திற்கு கண்டிப்பாக வருவார் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது வரை அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனுஷ்கா  ஆகியோர் மட்டும் காரில் இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் வந்தாரா இல்லையா என்பது இந்த திருமண நிகழ்ச்சி அதிகாரபூர்வமாக ஒளிபரப்பும் போது தான் தெரிய வரும் என்கிறது சினிமா வட்டாரம்.

Published by
Manikandan

Recent Posts