தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகை குறிப்பிட்ட நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கிசுகிசு தானாக வந்து விடும். சில நடிகைகள் என்ன செய்தாலும் கிசுகிசு தான். ஆனால் கிசுகிசுவே வராத நடிகையும் இருக்கிறார்;. அவர் தான் நதியா. இதற்குக் காரணம் அவரது அம்மா தானாம். நடிகை எங்கு சென்றாலும் அவரைக் கூடவே இருந்து கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாராம்.
மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான படம் பூவே பூச்சூடவா… படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பாடல்கள் சக்கை போடு போட்டன. இந்தப் படத்தில் தான் நதியா அறிமுகமானார். முன்னர் மலையாளப்படங்களில் நடித்து வந்த அவர் இந்தப் படத்தில் இருந்து தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
சீனியர் நடிகர்களுடன் தான் நடிப்பேன். புதுமுக நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்பவர் அல்ல நதியா. யாராக இருந்தாலும் கதை தான் அவருக்கு முக்கியம். நீச்சல் உடை, கட்டிப்பிடிப்பது, படுக்கையறை போன்ற கண்றாவி காட்சிகளைத் தவிர்த்து தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்து நடித்து வந்தார். அதனால் தான் தாய்மார்கள் மத்தியில் அவருக்கு எப்போதும் தனியிடம் இருந்தது.
இப்படி நடித்த போதும் அவரது கால்ஷீட் எப்போதும் பிசியாகவே இருந்தது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்காகக் காததுக்கிடப்பார்களாம். ரஜினி, விஜயகாந்த், பிரபு, மோகன், சுரேஷ், சத்யராஜ் என சீனியர் நடிகர்களுடன் நடித்து சக்கை போடு போட்டவர் நதியா.
சிவாஜியுடன் இவர் இணைந்து நடித்த ஒரே படம் அன்புள்ள அப்பா. திருமணத்திற்கு முன் இவர் கடைசியாக நடித்த படம் ராஜாதி ராஜா. அதன்பிறகு திருமணமானதும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாமிரபரணி, சண்டை, பட்டாளம் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து மாஸ் காட்டினார். திருமணமானதும் 2 பெண் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டாராம்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…