Connect with us
pirai soodan

Cinema News

பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்…. திரையுலகம் இரங்கல்…

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 65.

இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படமான ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்கிற பாடல் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரைக்கும் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சுமார் 1500 பாடல்களை அவர் எழுதியுள்ளார். பாடல் எழுதுவது மட்டுமில்லாமல் கவிதைகளையும் அவர் எழுதி வந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் தனது குடும்பத்தினருடன் அவர் பேசிக்கொண்டிருந்த போது அவர் மரணமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.

அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top