கோலிவுட்டின் படங்களில் ஒன்றான யாரடி நீ மோகினி படத்திற்கு முதலில் முழு கதையை எழுதி கொடுத்த இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்த யாரடி நீ மோகனி 2008ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, ரகுவரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான எல்லா பாடல்கள் டாப் ஹிட் அடித்தது. இத்திரைப்படம் ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இதையும் படிங்க: அட்வான்ஸை திருப்பி கேட்ட சன் டிவி… திணறிப்போன செல்வராகவன் படக்குழுவினர்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?
இப்படத்தினை இயக்குனர் ஜவஹர் இயக்கி இருந்தார். ஆனால் இப்படத்திற்கு கதை எழுதியது செல்வராகவன் தானாம். தம்பி படத்திற்காக மெனக்கெட்டு இப்படத்தின் கதையை அழகாக வடிவமைத்து கொடுத்தார்.
இதனால் தான் படத்தின் சில காட்சிகளை பார்க்கும் போது செல்வராகவன் பட பாணியிலே அமைந்து இருந்தது. அதிக பேச்சுகள் இல்லாமல் காட்சியில் சொல்லிய விதமே அதற்கு சான்று. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் வந்து பெருவாரியான காட்சிகளில் உதவி செய்ததார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Actor Karthick: …
MGR: தமிழ்…
Red Giant…
Malavika Mohanan:…
கங்கை அமரன்…