இன்னும் திருந்தலையா நீ ? ரசிகர்களை கடுப்பேத்திய யாஷிகாவின் அந்த புகைப்படம்!

விபத்திற்கு பிறகு மீண்டும் போட்டோஷூட், தொலைக்காட்சி நிகழிச்சிகள் என தற்போது பிசியாக வலம் வருகிறார் நடிகை யாஷிகா.

தமிழ் திரையுலகிற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா. அத்திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக ஒன்றும் அமையவில்லை. இருந்தாலும் விடா முயற்சியாக சமூக வலைதளைங்களில் தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

அதன் பின் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 யில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், போட்டோஷூட் என பிஸியாக வலம் வந்த யாஷிகாவிற்கு கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்பட்டது. அதனால் பல மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த யாஷிகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக படு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் செய்து வரும் யாஷிகா, தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில், கையில் மது கோப்பையை ஏந்தியபடி எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கல் ஒடஞ்சும் திருந்தலையா நீ ? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story