எஸ்.கே. ஹீரோவாக நானும், இமானும்தான் காரணம்!. பாடலாசிரியர் சொன்ன பிளாஷ்பேக்…

Published on: April 27, 2026
sk imman
---Advertisement---

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமாகி முன்னணி நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன் .பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா என்கிற படத்தில்தான் சிவகார்த்திகேயன் முதன்முதலாக அறிமுகமானார். அதன்பின் எழில் இயக்கிய மனம் கொத்தி பறவை என்கிற படத்தில் நடித்தார். ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதேபோல் அதன் பின் வெளிவந்த ரஜினி முருகன் படமும் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது..

அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சிவகார்த்திகேயன் நடித்தார். சில படங்களை அவரை சொந்தமாகவும் தயாரித்தார். தற்போது 60 முதல் 70 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார். தற்போது தாய்க்கிழவி படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கவிஞர் யுகபாரதி ‘மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் நடிச்சதுக்கு நானும் இசையமைப்பாளர் இமானும் ஒரு காரணம் என சிவகார்த்திகேயனுக்கே தெரியுமான்னு எங்களுக்கு தெரியல.. விஜய் டிவில காமெடி ஷோ பார்த்துட்டு இவர் நல்லா பண்றாருனு பேசிட்டு இருந்தோம்.. அப்ப எழில் சார் வந்தார்.. அவரும் அஞ்சு வருஷம் கேப்.. அவர் கிட்ட சிவகார்த்திகேயன் ஒரு பையன் நல்ல பண்றான்.. அவனை ஏன் நீங்க உங்க படத்துல நடிக்க வைக்கக் கூடாதுன்னு கேட்டோம்..

அவர் ‘எனக்கும் அந்த பையன் பண்றது பிடிக்கும்.. பண்ணலாமே’ன்னு சொன்னார். அப்படி உருவான படம்தான் மனம் கொத்தி பறவை’ என சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயன் துவக்கத்தில் நடித்த படங்களின் வெற்றிக்கு இமானின் பாடல்கள் முக்கிய காரணமாக இருந்தார்.. ஆனால் ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக இருவரும் புரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது..