
Cinema News
கிடைக்கிறதே குதிரைக்கொம்பு… அதுல வேற இப்படியா பண்ணுவீங்க…? முருகதாஸை டார்ச்சர் பண்ணிய அசின்..!
Published on
2005ல் வெளியான சூப்பர்ஹிட் படம் கஜினி. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சூர்யா உடலை வருத்திக் கொண்டு நடித்த படம். இந்தப் படத்தின் ரீ ரிலீஸ் சூர்யாவின் பிறந்தநாளன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் படத்தைப் பற்றிய சுவாரசியமான சில விஷயங்களை வலைப்பேச்சு அந்தனன் பகிர்ந்தள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.
எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடைப்பது என்பதே பெரிய விஷயம். கஜினி படத்திற்காக ரொம்ப பாடுபட்டு ஒரு முறை இரவு நேரத்தில் சூட்டிங்கிற்காக அனுமதி வாங்கினார்களாம். நைட் 9 மணில இருந்து 2 மணிக்குள்ள சூட்டிங் எடுக்கணும். அது எப்படின்னா, மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைகளை அசின் மீட்டு சென்னை எழும்பூர்ல வந்து இறங்குவது போன்ற காட்சி.
Kajini
அந்தப் படத்தில் ‘சஞ்சய் ராமசாமி’ கேரக்டரில் சூர்யா வருவார். அவர் வந்து போன் பேசும்போதே மொத்த விஷயத்தையும் முடித்து விடுவார் என்பது தான் கதைப்படி காட்சி. ஆனால் படப்பிடிப்பு நேரத்தில் நடந்த குழப்பத்தால் அதை எல்லாம் முருகதாஸ் எடுக்கவே இல்லையாம். அவ்வளவு டென்ஷன்.
அன்று இரவு அசினோடு இருந்து டின்னர் சாப்பிட்டுள்ளார். அப்போது நயன்தாராவுக்கு இந்தப் படத்துல ஒரு சாங் இருக்குன்னு சொல்கிறார் முருகதாஸ். அசின் இன்னொரு சாங் எப்போ எடுக்கறீங்கன்னு கேட்டுள்ளார். அது உங்களுக்கு இல்ல மேடம். நயன்தாராவுக்குன்னு சொல்லிவிட்டார்.
அவ்வளவு தான். அவங்க பயங்கரமான டென்ஷனா ஆயிட்டாரு. ஆனா அதை எல்லாம் வெளியே காட்டிக்காம, கேரவனுக்குள்ள போனவங்க 2 மணி நேரமா கதவைத் திறக்கவே இல்லையாம். அதன்பிறகு அசிஸ்டண்டை விட்டுக் கதவைத் தட்டுனா 2 மணி நேரம் கழிச்சி கதவைத் திறக்கிறாராம். எனக்கு வயிற்றுவலி. என்னால இப்ப நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்.
இதையும் படிங்க… இயக்குனர் மறுத்தும் விடாமல் கவர்ச்சி விருந்தைக் காட்டிய நயன்தாரா… என்ன ஒரு எளிமை…!
முருகதாஸ்சுக்குப் பயங்கர கோபம். கதைப்படி நடந்ததை எல்லாம் டிரெய்ன்ல வரும்போது சொல்லணும். ஆனா அதை எல்லாம் எடுக்க எந்த நேரமும் இல்லை. எடுக்காம அசின் குழந்தைகளோட இறங்கி வர்ற மாதிரி மட்டும் எடுத்துட்டு மற்ற கதையை எல்லாம் போன்லயே சொல்ற மாதிரி காட்சியை மாற்றி விட்டாராம் இயக்குனர். அந்த சம்பவத்திற்குப் பின் முருகதாஸ்சுக்கு அசின் என்று சொன்னாலே அவரது முகம் மாறிவிடுமாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...
இளம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Leo, coolie ஆகிய இரண்டு படங்களாலும் அருக்கு இருந்த...