மகளுக்காக 20 நிமிடங்களில் சிவாஜி காட்டிய 36 முகங்கள்… மனுஷன் பின்னிட்டாரய்யா…!

1967ல் வெளியான தங்கை படத்தின் கதை விவாதம் அன்னை இல்லத்தில் நடந்து கொண்டு இருந்தது. ஏ.சி.திருலோகசந்தரும், சிவாஜியும் இணைந்து விவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு சிவாஜியின் விவாதம் வியப்பாக இருந்ததாம். எந்த விதப் பந்தாவும் இல்லாமல் நண்பருடன் சகஜமாக உரையாடிக் கொண்டு இருந்தாராம்.

கருணாநிதி கதை வசனம் எழுதிய சிவாஜி நடித்த படம் ராஜா ராணி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூடோன் அரங்கில் நடந்தது. சிவாஜியை எப்படியாவது புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்பது பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆசை.

Thangai movie

படப்பிடிப்பு இடைவேளையின் போது நான் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என சிவாஜியிடம் கேட்டாராம் ஆனந்தன். உடனே அதனால் என்ன எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம் சிவாஜி. சில காலம் கழித்து பேசும்படம் பத்திரிகை சிவாஜியின் நவரச முகபாவனைகளை புகைப்படமாக எடுத்து தங்கள் இதழில் வெளியிட ஏற்பாடு செய்தது. அந்த பணியை பிலிம் நியூஸ் ஆனந்தனிடம் ஒப்படைத்தது.

ஒருமுறை புகைப்படம் எடுக்க சிவாஜியின் வீட்டுக்கு வந்து விட்டார் ஆனந்தன். அன்று சிவாஜியும் படப்பிடிப்பு முடிந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விட்டார். அதனால் தனது மகள் சாந்தியுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். சிறுமியான சாந்தி தன் தந்தையின் தோள் மீது ஏறி உப்பு மூட்டை சுமக்கச் செய்தாராம். அவரும் எந்த வித பந்தாவும் இல்லாமல் மகளுடன் விளையாடியது ஆனந்தனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

சிவாஜியின் தூய்மையான உள்ளம் அவருக்குப் பிடித்துவிட்டதாம். சிவாஜியைப் பின் தொடர ஆரம்பித்து விட்டார். சிவாஜி பிலிம்ஸில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். திரைத்துறை தகவல்கள், செய்திகளை சேகரித்தார். ஆனந்தன் தன் சொந்த அலுவலகம் போல சிவாஜி பிலிம்ஸைப் பயன்படுத்திக் கொண்டார். தனது மகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த சிவாஜியிடம் புகைப்படம் எடுக்க வந்த விஷயத்தைத் தயக்கத்தோடு தெரிவித்தார் ஆனந்தன்.

Shanthi, Sivaji

பேசும்படத்தின் இந்த வித்தியாசமான கலை நுணுக்கப் பார்வை சிவாஜியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கருணை, வீரம், சிருங்காரம், நகைச்சுவை, வெறுப்பு, பயங்கரம், திகைப்பு, அமைதி, முரட்டுத்தனம் என 9 வகையான பாவனைகளை 4 விதமாக சிவாஜி செய்து காட்டி அசத்தினார்.

20 நிமிடத்தில் ஒரு கலைஞன் எப்படி 36 வகையான நடிப்பைக் காட்ட முடியும்? என்று ஆனந்தன் அசந்து போனாராம். சிவாஜியின் உள்ளுக்குள் இருந்த நடிப்பு அதை சாதித்தது. நவரசங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டது. எதை விடுவது என்றே தெரியவில்லையாம்.

மகளுக்கும் தந்தையைப் போலவே நடிக்க ஆசையாம். அதனால் சாந்தியும் மகளைப் போல நவரசங்களையும் முகத்தில் கொண்டு வந்தாராம். பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்தப் புகைப்படங்களை அவர் பொக்கிஷமாக வைத்து இருந்தாராம். அப்படிப்பட்ட அபூர்வ புகைப்படங்களை அவர் எடுத்ததால் தான் இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது.

sankaran v

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago