More
Read more!
Categories: Cinema News latest news

லிங்குசாமிக்காக யாரும் செய்யாததை செய்த வெற்றிமாறன்! இதைவிட என்ன வேணும்?

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் தொடங்கி விடுதலை வரைக்கும் அவர் எடுத்த ஒவ்வொரு படத்திற்குள்ளும் ஒரு ஆழமான கருத்துக்கள் இருக்கின்றன. சமூக அக்கறையுள்ள கருத்தை படத்தின் மூலம் சொல்லி மக்களை ஒரு சமூக சிந்தனை உள்ள மனிதர்களாக மாற்றும் முயற்சியில் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் இவர்களுடன் வெற்றி மாறனும் இப்போது இணைந்து இருக்கிறார்.

அதுவும் நாவல்களை படமாக எடுப்பதில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருகிறார் வெற்றிமாறன். இப்போது விடுதலை இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டு வருகிறது. அந்த படத்திற்கு பிறகு சூர்யாவுடன் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் இணைய இருக்கிறார் வெற்றிமாறன்.

இதையும் படிங்க: மதுரை முத்துவை இதுவரை யாரும் இந்த கோலத்தில் பார்த்திருக்க மாட்டீங்க! வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி வெற்றிமாறனை பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதாவது வெற்றிமாறனை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெற்றிமாறன் அதை செய்ய மாட்டார். கூடிய சீக்கிரம் நடிக்க வந்தால் அதுவும் நன்றாக இருக்கும் என கூறினார்.

மேலும் பொல்லாதவன் படத்தின் போதே லிங்குசாமி ‘என் ப்ரொடக்ஷனில் ஒரு படம் எடுக்க வேண்டும் என வெற்றிமாறன் ஒரு ஸ்கிரிப்ட் எடுத்து வந்தார். ஆனால் அந்த நேரத்தில் அது முடியாமல் போய்விட்டது’ எனக் கூறினார். ஆனால் இதை லிங்குசாமி மறந்து விட்டாராம்.

இதையும் படிங்க:இசையா மொழியா என்பதல்ல விஷயம்… இது அதையும் தாண்டி… கேட்டுப்பாருங்க… சும்மா ‘ஜிவ்’வுன்னு இருக்கும்..!

சமீபத்திய ஒரு சந்திப்பில் வெற்றிமாறன் இதை லிங்குசாமியிடம் கூறி ஞாபகம் படுத்தி இருக்கிறார். அதுவும் இப்போது லிங்குசாமியின் நிலை என்ன என்பது தமிழ் சினிமாவிற்கே தெரியும். அதனால் வெற்றிமாறன் அவராக முன் வந்து நான் உங்கள் ப்ரொடக்ஷனில் ஒரு படம் எடுத்தால் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக உங்களுக்காக ஒரு படம் நான் எடுத்து தருகிறேன் என கூறி இருக்கிறாராம்.

இதைக் குறிப்பிட்டு சொல்லும் போது லிங்குசாமி ‘வெற்றிமாறன் இடத்தில் நான் இருந்தால் கூட இதை நான் சொல்லி இருப்பேனா என எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு நல்லவனா என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் வெற்றிமாறன் இதை சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அவர் இயக்கத்தில் படங்களில் நடிக்க தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமாக்களிலும் நடிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்’ என லிங்குசாமி கூறினார்.

இதையும் படிங்க: அப்போ ஷகீலா சொன்னது பொய்யா? உண்மையில் நடந்தது என்ன? திணறும் பயில்வான்

Published by
Rohini

Recent Posts