அப்போ ஷகீலா சொன்னது பொய்யா? உண்மையில் நடந்தது என்ன? திணறும் பயில்வான்

Bayilwan Renganathan: சர்ச்சைக்கு பெயர் போனவரும் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகைகளை பற்றிய அந்தரங்கத்தை அருகில் இருந்து பார்த்தவர் போல் தனது youtube சேனல் மூலமாக வெளிப்படுத்தி பல பேரின் ஆதங்கத்தை வாங்கி கட்டியவர். எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்ற நாகரீகம் கூட தெரியாத ஒரு மனிதராக இருக்கிறாரே என பல திரை பிரபலங்கள் இன்று வரை அவரை வசை பாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இருந்தாலும் நடிகைகளே இதை வெளிச்சம் போட்டு காட்டும்போது நான் என்ன செய்ய முடியும். அதனால்தான் நான் என்னுடைய சேனல் மூலம் எடுத்துக் கூறி வருகிறேன் என அசால்ட் ஆக சொல்லி அனைவரின் வாயை அடைத்து வருகிறார். ஒரு சில பிரபலங்கள் இவர் மீது காவல் நிலையம் வரை சென்று புகாரும் அளித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் வில்லனாகக் கெத்து காட்டிய படங்கள்… டாங்லீக்கே முன்னோடியாக இருந்த கேப்டன்!

இருந்தாலும் தொடர்ந்து நடிகைகளையும் நடிகர்களையும் பற்றிய அந்தரங்கத்தை இன்று வரை தனது சேனல் மூலம் கூறிக்கொண்டு தான் வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது இவரும் சகிலாவும் எதிர் எதிராக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் வீடியோ வைரலானது. அப்போது ஷகிலா பயில்வான் ரங்கநாதனின் பொண்ணை பற்றி ஒரு ரகசியத்தை போட்டு உடைத்தார்.

அதை கேட்டதும் பயில்வான் ரங்கநாதனின் முகமே மாறிவிட்டது. அதாவது அவருடைய மகள் இன்னொரு பெண்ணை காதலிப்பதாக ஷகிலா கூறினார், இதை பயில்வான் ரங்கநாதன் ஏற்கவே இல்லை. இந்த ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையில் இன்று அவர் இன்னொரு சேனலுக்கு பேட்டி கொடுக்கும் போது அவரை நேர்காணல் எடுத்த ஒரு நிருபர் திரும்பவும் பயில்வான் ரங்கநாதனின் மகளைப் பற்றி கேட்க முற்படுகையில் தயவு செய்து இந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள் என எழுந்து செல்ல பார்த்தார்.

இதையும் படிங்க: விஜயின் அந்தப் படம் எப்படி ஓடுச்சுனே தெரியல? இதுக்கு இவ்ளோ ரெஸ்பான்ஸா? சுந்தர் சி சொன்ன படம்

அதன் பிறகு அந்த நிருபர் அதை அப்படியே நிறுத்திவிட்டு அப்போ ஷகிலா சொன்னது எல்லாம் பொய்யா? உண்மையில் அன்று என்ன நடந்தது என கேட்டார். அதற்கு பதில் அளித்த ரங்கநாதன் ஷகிலா வேண்டுமென்றே இந்த மாதிரி புகாரை கூறுகிறார். என்னை அவமானப்படுத்த வேண்டும் என நினைக்கிறார் என ரங்கநாதன் கூறினார்.

இதை குறுக்கிட்டு பேசிய அந்த நிருபர் நான் ஒரு கேள்வியை கேட்க முற்படும்போது அதை முழுவதுமாக கேட்காமல் உடனே எழுந்து செல்ல போனீர்கள். இதே மாதிரி தானே எல்லா நடிகைகளின் மனநிலைமையும் இருக்கும். அவர்களின் அந்தரங்கத்தையும் அவர்களின் சொந்த விஷயங்களையும் நீங்கள் கூறும் போது அவர்களின் மனநிலை எப்படியாக இருக்கும்? அது மட்டும் உங்களுக்கு தப்பாக தெரியவில்லையா? என கேட்டார். இந்த கேள்விக்கு பயில்வான் ரெங்கநாதன் அமைதியாக இருந்தார்.

இதையும் படிங்க: நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டர்டா… விஜய்க்கே ஆப்படித்த கமல்ஹாசன்… போடு மாஸ்…

 

Related Articles

Next Story