செல்வராகவனின் முன்னாள் மனைவியை கரம்பிடித்த எஸ்.பி.பி.சரண்.?! பதறிப்போய் அவரே வெளியிட்ட ஆதாரம்….

Published on: June 22, 2022
---Advertisement---

செல்வராகன் இயக்கத்தில் காதல் கொண்டேன் எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இவர், அதன் பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படஙக்ளில் நடித்து நல்ல நடிகையாகவும் வலம் வந்தார்.

அதன் பிறகு இயக்குனர் செல்வராகவனை 2006இல் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக 2010இல் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி.சரண்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனியா அகர்வால் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது இனிய ஆரம்பம் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் இந்த காப்பியடிச்ச போஸ்டருக்கு பல லட்சம் சம்பளமாம்.! வாரிசு டீமை ஏமாற்றிய டிசைனர்ஸ்..?

இதனை பார்த்த நெட்டிசன்கள், சோனியா அகர்வால் – எஸ்.பி.பி.சரண் ஆகியோருக்கு திருமணம் என நினைத்து பலரும் வாழ்த்து கூற ஆரம்பித்து விட்டனர் போலும். உடனே பதறி போன எஸ்.பி.பி.சரண், உடனே தனது இன்ஸ்டாகிராமில் முழு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதில் சரண், சோனியா அகர்வால், குக் வித் கோமாளி சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர். அதில் விலாவாரியாக, இது ஒரு வெப்சீரிஸ் என பதிவிட்டு உள்ளார். இதனை முன்னாடியே முழுதாக சொல்லியிருந்தால் இந்த வீண் வதந்தி பரவி இருக்காதே என பலரும் கூறி வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.