விஜய் – அஜித்திடம் இல்லாத திறமை சிவகார்த்திகேயனிடம் உள்ளதாம்… பலே கில்லாடி இந்தாளு…

Published on: July 21, 2022
---Advertisement---

சமீபத்தில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர் ஒருவர் அதிகமாக புதுமுக இயக்குனர்களுக்கு, படைப்பாளிகளுக்கு வாய்ப்பு தருகிறார் என்றால் அது சந்தேகமே இல்லை சிவகார்த்திகேயன் தான். அதுவும் அந்த படங்களை மிகப்பெரிய வெற்றியாக கொடுத்து வருகிறார்.

ஒரு படம் இயக்கிய நெல்சனை அழைத்து, டாக்டர் எனும் வாய்ப்பை கொடுத்தார். அதேபோல அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியை அழைத்து டான் எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து கொடுத்தார்.  தற்போதும் அடுத்தடுத்து சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு நடித்து வருகிறார் சிவா. இதில் அவருக்கு இரட்டை லாபம் வருகிறதாம். அதன் பின்னணி தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது ஒரு பெரிய இயக்குனர் படத்தில் நடித்தால், அவரது பெயர் முன்னணியில் தெரியும். ஹீரோவின் தலையீடு எதுவும் இருக்காது. முழுக்க முழுக்க இயக்குனர் திரைப்படமாக அப்படம் வெளியாகும். படத்தின் பட்ஜெட்டும் பெரிதாக இருக்கும்.

இதையும் படிங்களேன் – இன்னும் நீங்க மாறவே இல்ல சார்… வடிவேலுவின் புதிய வீடியோ பார்த்து கண்கலங்கும் ரசிகர்கள்…

ஆனால், ஒரு அறிமுக இயக்குனர் அல்லது புதுமுக இயக்குனர் என்றால் அவர், தன் சொல் கேட்டு நடப்பார். பட்ஜெட் குறைவாக இருக்கும். அதனை தனது பட நிறுவனம் மூலம் தயாரித்து விடலாம். ஆதலால் தயாரிப்பு செலவும் பாதி மிச்சம். எனவே சம்பளத்தை விட அதிகமாக லாபம் கிடைக்கும்.

அப்படித்தான் தனது எஸ்.கே பட நிறுவனம் மூலம் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படங்களை தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் மூலம் அவருக்கு இரட்டை லாபம் வருகிறது என்கிறது  சினிமா வட்டாரம். இந்த ஐடியா முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் – அஜித்துக்கு கூட இல்லாமல் போய்விட்டதே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.