Connect with us

Cinema News

இதற்காக தான் அலைபாயுதே எடுத்தார் மணிரத்னம்… கசிந்த சுவாரசிய தகவல்

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் மாதவனின் முதல் தமிழ் திரைப்படமான அலைபாயுதே உருவாக ஒரு சுவாரஸ்ய காரணம் இருக்கிறது.

பல போராட்டத்திற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தவர் நடிகர் மாதவன். 20களில் அலைபாயுதே படத்தின் மூலம் கோலிவுட்டின் நாயகனாக எண்ட்ரி கொடுத்தார். அவரின் முதல் இண்ட்ரோ சீனினை 22 வருடம் கழித்து இப்போ பார்த்தால் கூட பலரும் அவரிடம் கவரக்கூடும். தொடர்ந்து, அவருக்கு பல காதல் படங்கள் கிடைத்தன. கோலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

தற்போதைய சூழலில், மாதவன் பெரிதாக படங்களில் கவனம் செலுத்தவில்லை. இருந்தும் அவரின் அந்த சாக்லேட் பாய் படங்களுக்கு இன்னும் ரசிக கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.இந்நிலையில், மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் ஆடிஷனில் மாதவன் கலந்து கொண்டிருக்கிறார். தேர்வான அவரை அழைத்த மணிரத்னம், உன் கண் ரொம்ப சின்னதாக இருக்கிறது.

இதையும் படிங்க: அலைபாயுதே படத்தில் விக்ரமுக்கு வந்த வாய்ப்பு…! நல்ல வேலை நடிக்கல..எந்த கதாபாத்திரம்னு தெரியுமா..?

இப்படம் வேண்டாம். நான் சொல்லும் போது நடிக்க வா என அனுப்பி விட்டாராம். மாதவனும் இது ஆகுறதுக்கு இல்லை எனக் கிளம்பிவிட்டாராம். பின்னர் சில வருடம் கழித்து, மணிரத்னம் அழைத்து மாதவன் நடித்த படம் தான் அலைபாயுதே.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top