
Cinema News
காதலுக்காக 13 வருடம் காத்திருந்த ரோஜா… செல்வமணிக்கு தடா போட்ட ரோஜாவின் பெற்றோர்…
Published on
By
இயக்குனர் செல்வமணியினை கரம் பிடிக்க நடிகை ரோஜா 13 வருடம் காத்திருந்ததாக சுவாரஸ்ய தகவல் ஒன்று உலா வருகிறது.
தெலுங்கு பட உலகின் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் ரோஜா. ராஜேந்திர பிரசாத் நடிப்பில் வெளியான பிரேமா தபசு தான் ரோஜாவின் முதல் படம். தொடர்ந்து அவரை ஆர்.கே.செல்வமணி தமிழுக்கு அழைத்து வந்தார். செம்பருத்தி படத்தில் பிரசாந்தின் நாயகியானார். அதை தொடர்ந்து, சரத்குமார் நடிப்பில் சூரியன் என்ற படத்திலும் நடிக்க ரோஜாவிற்கு கோலிவுட்டில் வரவேற்பு கூடியது. ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்தன.
ரோஜா
தனது முதல் இயக்குனரான செல்வமணி மீது ரோஜாவிற்கு காதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் தங்கள் காதலினை தெரிவித்து கொண்டனர். ஆனால், ரோஜா சினிமாவில் வளர்ந்த நேரம், இயக்குனராக தொடர் தோல்விகளை சந்தார் செல்வமணி. இதுவே இவர்கள் காதலுக்கு பின்னர் பிரச்சனையாக வந்தது. இவர்கள் காதல் செய்தி வெளியில் கசிய, மார்க்கெட் இல்லாத இயக்குனரை காதலிக்காதே என அனைவரும் ரோஜாவிடம் கிசுகிசுத்தனர். இருந்தும் ரோஜா தனது முடிவில் துளி அளவும் மாறவே இல்லையாம்.
இதையும் படிங்க: ரோஜாவை நம்பி களமிறங்கும் விக்ரம்!.. என்ன புதுசா இருக்குல…? எல்லாம் பெத்த கடன தீர்க்கத்தான்!..
இருவரும் வேறு சாதி என்பதால் அதுவும் கூட இவர்கள் காதலுக்கு பிரச்சனையை வீசியது. பெற்றோர்கள் இந்த மாப்பிள்ளை வேண்டாம். நீ அவரை பார்க்கவே கூடாது என ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தனர். ஆனால் ரோஜா கடைசி வரை செல்வமணி மீதான காதலில் உறுதியாக இருந்திருக்கிறார்.
ரோஜா செல்வமணி
இந்த பிரச்சனைக்காக 13 வருடம் இருவரும் காத்திருந்தனராம். 2002ம் ஆண்டில் தான் பெற்றோர்கள் சம்மதம் கூறி ஒரு வழியாக அவர் காதலரும், இயக்குனருமான செல்வமணியினை கரம் பிடித்தார் நடிகை ரோஜா.
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....
Kantara 2 : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு,...