
Cinema News
இந்த நடிகர் சொந்தமா வீடு வாங்கக்கூடாது- தடை போட்ட கலெக்டர்… அப்படி என்ன நடந்திருக்கும்!
Published on
1930களில் இருந்து 40கள் வரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் பி.யு.சின்னப்பா. இவர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறுபவர்கள் உண்டு. இவருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அதாவது தமிழ் சினிமாவில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் பி.யு.சின்னப்பாதான்.
திடீரென மயங்கி விழுந்த நடிகர்
பி.யு.சின்னப்பா, “சந்திரகாந்தா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து “அனாதை பெண்”, “மாத்ரு பூமி”, “உத்தமபுத்திரன்” ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து “ஆர்யமாலா”, “ஹரிச்சந்திரா”, “மங்கையர்கரசி”, “ரத்னக்குமார்” போன்ற பல திரைப்படங்களில் நடித்த பி.யு.சின்னப்பா 1951 ஆம் ஆண்டு ஒரு நாள் ரத்த வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்தார். அப்போதே அவரது உயிர் பறிப்போனது. அவருக்கு குடிபழக்கமும் புகைப்பழக்கமும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆர்டர் போட்ட கலெக்டர்
பி.யு.சின்னப்பா தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் என்பதால் புகழோடு சேர்ந்து அவருக்கு பணமும் கொட்டியது. ஆதலால் நிறைய சொத்துக்களை வாங்கிக்குவித்தாராம். குறிப்பாக தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் 30க்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கி குவித்தாராம். ஆதலால் அப்போது அந்த பகுதியில் கலெக்டராக இருந்தவர், “பி.யு.சின்னப்பாவிற்கு யாரும் வீடு விற்க கூடாது” என்று சட்டமே போட்டாராம்.
ஆனால் இதில் சோகம் என்னவென்றால், அந்த சொத்துக்கள் எல்லாம் பின்னாளில் அழிந்துபோனது. அவரது வாரிசுகள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டு வாழ்ந்து வந்தார்களாம்.
இதையும் படிங்க: மணிரத்னத்தை மரத்தடியில் கால்கடுக்க நிற்க வைத்த இளையராஜா… இப்படியெல்லாம் நடந்துருக்கா?
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...