
Cinema News
மணிரத்னத்தை கால் கடுக்க காக்க வைத்த பாலச்சந்தர்!… ஆனா அதுக்கப்புறம் நடந்ததுதான் சம்பவமே!
Published on
மணிரத்னம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய “ரோஜா” திரைப்படம் இவரை ஒரு இந்திய இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. இத்திரைப்படத்தின் மூலம்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மாம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இத்திரைப்படம் உருவாவதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று கூறப்படுகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.
கே.பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸின் இணை தயாரிப்பாளரான பிரமிட் நடராஜன், “மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாமா?” என கேட்டாராம். அதற்கு பாலச்சந்தர், “இல்லை. அவர் நமது கம்பெனிக்கு படம் பண்ணமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்” என கூற, அதற்கு பிரமிட் நடராஜன் “ஏன்?” என கேட்டிருக்கிறார்.
“மணிரத்னம் இயக்குனரான புதிதில் பல முறை வாய்ப்புக்காக நமது கம்பெனி வாசலில் வந்து நின்றிருக்கிறார். ஆனால் நான் அவரை அந்த சமயத்தில் கண்டுகொள்ளவில்லை. ஆதலால் அது அவரது மனதில் பதிந்திருக்கும். நானே சென்று கேட்டு அவர் முடியாது என்று சொல்லிவிட்டால் அது அவமானமாக போய்விடும்” என்று கூறினாராம். ஆனால் பிரமிட் நடராஜனோ, “நான் அவரிடம் சென்று பேசுகிறேன்” என கூறிவிட்டு மணிரத்னத்திடம் சென்றிருக்கிறார்.
அங்கே மணிரத்னத்தை சந்தித்து, “நீங்கள் பாலச்சந்தர் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணித்தர முடியுமா?” என கேட்ட மறு நொடியில் மணிரத்னம், “நிச்சயமாக படம் பண்ணுகிறேன். நான் அவரை எப்போது வந்து பார்க்க வேண்டும்?” என கேட்டாராம். இதனை தொடர்ந்துதான் “ரோஜா” திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இதையும் படிங்க: உன் வாய்ஸ் ஆம்பள மாதிரி இருக்கு!. நடிகையை நிராகரித்த இயக்குனர்கள் – வாய்ப்பு கொடுத்த பாலச்சந்தர்…!
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...