Connect with us

Cinema News

படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கரால் கண்ணீர் விட்ட நடிகை!.. உதவி செய்த கதாநாயகன்…

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். அவர் இயக்கும் படங்கள் யாவும் வெற்றி படங்களாகவே அமைவதால் மக்கள் மத்தியில் ஷங்கருக்கு நல்ல வரவேற்பு உண்டு.

மேலும் இதனால் பெரும் நடிகர்கள் கூட ஷங்கர் படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். தற்சமயம் ஷங்கர் படப்பிடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கிய திரைப்படங்களிலேயே அவருக்கு பெரிதாக ஓடாத படமாக அமைந்த படம் பாய்ஸ்.

Shankar

Shankar

இப்போதும் கூட பாய்ஸ் திரைப்படம் ஷங்கர் இயக்கியது என கூறினால் பலருக்கும் நம்புவதற்கு கடினமாக இருக்கும். இந்த படம்தான் தமிழில் ஜெனிலியாவிற்கு முதல் படமாகும். இந்த படத்தில் நடிக்கும்போது ஜெனிலியாவிற்கு சுத்தமாக தமிழ் தெரியாது.

ஜெனிலியாவிற்கு வந்த கஷ்டம்:

அந்த படப்பிடிப்பில் நடந்த சில அனுபவங்களை சித்தார்த் பகிர்ந்துள்ளார். ஜெனிலியா தினமும் டயலாக் பேப்பரை பார்த்த உடனேயே ஷாக் ஆகிவிடுவார். நான் தான் அவருக்கு வசனங்களை எல்லாம் தமிழில் சொல்லி தருவேன். ஒருமுறை இரண்டு பக்க கடினமான வசனத்தை ஜெனிலியாவிடம் கொடுத்துவிட்டார் ஷங்கர்.

boys

boys

அதை பார்த்த உடனேயே அழ துவங்கிவிட்டார் ஜெனிலியா. அதன் பிறகு அவரை சமாதானம் செய்து அவருக்கு வசனங்களை சொல்லி கொடுத்தேன் என அந்த பேட்டியில் கூறியுள்ளார் சித்தார்த்.

இதையும் படிங்க: இருதலை கொள்ளியாக தவிக்கும் மகிழ்திருமேனி! மௌனம் காக்கும் அஜித்.. சிக்கலில் விடாமுயற்சி

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top