Connect with us
ajith

Cinema News

இருதலை கொள்ளியாக தவிக்கும் மகிழ்திருமேனி! மௌனம் காக்கும் அஜித்.. சிக்கலில் விடாமுயற்சி

உஷ்ஷ்.. எப்பா..பேசாம டிராப் ஆக்கிடுங்க என்று ரசிகர்கள் எரிச்சலடைகிற வரைக்கும் தள்ளப்பட்டிருக்கிறது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலைமை. இன்று படப்பிடிப்பு ஆரம்பமாகும், அந்த தேதியில் ஆரம்பமாகிறது என்று கிட்டத்தட்ட 4 மாதங்களாகியும் படம் கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே கிடக்கிறது. என்னதான் ஆச்சு என்று விசாரித்தால் அங்கு நடந்த சம்பவமே ஆச்சரியப்பட வைக்கின்றது.

ajith1

ajith1

இதில் மிகவும் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பவர் இயக்குனர் மகிழ்திருமேனிதான். அவரை விட்டிருந்தால் வேறொரு படத்தில் கமிட் ஆகி இந்நேரம் படத்தையே முடித்திருப்பார். ஆனால் விடாமுயற்சி படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர் கொடுக்கும் 4 ஸ்கிரிப்ட்களையும் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறார்களாம்.

சரி, இதுதான் என கடைசியாக ஒரு ஸ்கிரிப்டை அஜித்திடம் கொடுக்க அஜித்தோ அதை வாங்கி இன்னும் படிக்காமலேயே இருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் அதற்குண்டான சரியான பதிலையும் கொடுக்காமல் இருக்கிறாராம்.

ajith2

ajith2

இதனை பார்க்கும் போது அஜித்திற்கு நடிப்பில் ஆர்வம் குறைந்து விட்டதா? இல்லை ஸ்கிரிப்ட் நன்றாக இல்லையா? இல்லை இந்தப் படத்தை அப்படியே டிராப் செய்து விடலாமா என யோசிக்கிறாரா? என்ற கேள்விதான் இப்போது கோடம்பாக்கத்தில் நிலவி வருகின்றது.

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு தல கூலாக லண்டனில் தான் விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் அவர் மேல் உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் விடாமுயற்சி படம் வருமா? வராதா? என்ற ஏக்கத்திலேயே இருந்து வருகின்றனர்.

ajith3

ajith3

இதற்கிடையில் விஜயை சில பேர் விமர்சித்து வந்தாலும் ஒரு படத்திற்கான எல்லா ஒத்துழைப்பையும் சரியான நேரத்தில் கொடுக்கக்கூடியவராகத்தான் விஜய் இருக்கிறார். படத்திற்கான கெட்டப்பிலிருந்து பாடல் காட்சிகள் வரை எப்படி நடக்கிறது? என மிக கவனமாக இருப்பாராம் விஜய். ஆனால் இந்த விடாமுயற்சியில் அஜித் என்னவோ முயற்சியை கைவிட்டாரா ? என்றுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.  இந்த தகவலை செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : லூஸ் டாக்கில் வம்பை விலைக்கு வாங்கிய வெங்கட் பிரபு! விருந்து வைத்து அனுப்பிய விஜய்

google news
Continue Reading

More in Cinema News

To Top