
Cinema News
சிலுக்கு என் கன்னத்துல அடிச்சாங்க!. இறந்தப்ப சந்தோஷப்பட்டேன்!.. ஷாகிலா பகிர்ந்த பகீர் தகவல்..
Published on
By
தமிழ் சினிமாவில் ஐட்டம் சாங் என அழைக்கப்படும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களிடம் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா. 70,80 களில் பல படங்களில் நடனமாடி ரசிகர்களின் மனதில் கவர்ச்சி கன்னியாக குடியேறியவர். ரஜினி,கமல் போன்ற பெரிய நடிகர்களின் படத்தின் வெற்றிக்கு கூட சில்க் ஸ்மிதா தேவைப்பட்டார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார்.
silk3
அதேபோல், கேரளாவில் ஆபாச பட நடிகையாக இருந்தவர் ஷகிலா. பல படங்களில் ஆபாசமாக நடித்து மம்முட்டி மற்றும் மோகன்லால் படங்களுக்கே டஃப் கொடுத்தவர். தமிழிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விதவிதமாக சமைத்து எல்லோருக்கும் அம்மாவாக மாறினார். மேலும், யுடியூப்பில் சர்ச்சையில் சிக்கிய பெண்களை அழைத்துவைத்து பேட்டியெடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஷகிலா ‘எனக்கு அப்போது 18 வயதுதான் இருக்கும். சில்க் ஸ்மிதா நடித்த ஒரு படத்தில் நான் நடித்தேன். கதைப்படி அவர் என்னை அறைய வேண்டும். லேசாக அறைவேன் என சொல்லிவிட்டு மிகவும் வேகமாக அறைந்தார். இதனால் கோபித்துகொண்டு அப்படத்திலிருந்து வெளியேறினேன்.
அவர் இறந்தவுடன் மிகவும் சந்தோசப்பட்டேன். அந்த வயதில் எனக்கு அந்த பக்குவம்தான் இருந்தது. ஆனால், இப்போது என் கோபம் முட்டாள்தனமானது என புரிகிறது. அவரே இறந்துவிட்டார். அவர் மீது அன்பு இல்லை என்றாலும் வெறுப்பை வளர்க்க கூடாது என்கிற பக்குவம் வந்துவிட்டது’ என அவர் பேசியுள்ளார்.
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...