கேஜிஎப் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட்!.. தெறி மாஸா உருவாகவுள்ள 3ம் பாகம்!.. பி ரெடி ஃபேன்ஸ்

Published on: October 7, 2023
kgf
---Advertisement---

KGF3: கன்னட நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் யாஷ் கேஜிஎப் படத்திற்கு பின் பேன் இண்டியா நடிகராக மாறினார். இந்த படம் கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இப்படம் பிடித்துப்போனது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். கன்னடத்தில் இதுவரை இப்படி ஆக்‌ஷன் படத்தை அந்த ரசிகர்கள் பார்த்தது இல்லை. ஒரு ஹீரோவை இவ்வளவு பில்டப் செய்து இதுவரை எந்த இயக்குனரும் காட்சிகளை வைத்தது இல்லை.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் ஹாயாக இருந்த ரஜினி… ஒரே அழைப்பால் அலற விட்ட பிரபலம்..! சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?

2018ம் வருடம் வெளியான இந்த படம் நல்ல வசூலை பெற்றது. அதேபோல் இதே படத்தின் இரண்டாம் பாகம் 2022ம் வருடம் வெளியாகி முதல் பாகத்தை விட பல மடங்கு வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் இறுதியில் பிரதமர் கதாபாத்திரத்தில் இருக்கும் ரவீனா டண்டன் இவரை கைது செய்ய முயற்சி செய்வார்.

ஆனால், சம்பாதித்த அத்தனை தங்கங்களையும் கப்பலில் ஏற்றி ராக்கி அங்கிருந்து தப்பிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். போலீசார் அவரை சுடும்போது குண்டடி பட்டு ராக்கி கடலில் விழுவது போல் படம் முடியும். இந்நிலையில், அடுத்த படத்திற்கான கதையை பிரசாந்த் நீல் எழுதி முடித்துவிட்டாராம்.

இதையும் படிங்க: படிச்சா மட்டும் நல்லதுனு சொல்லல! படிச்சா நல்லா இருக்கும்னு சொல்றேன் – மொத்தமா குழப்பிய கமல்

கேஜிஎப் 2-வை முடித்த பின் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கபோனார். தற்போது அந்த படம் முடிந்த நிலையில், கேஜிஎப் 3 படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டார். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு 2024ம் வருடம் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் 10 நிமிடம் மட்டுமே இந்தியாவில் இருக்குமாம். அதன்பின் படம் முழுவதும் வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனராம். அமெரிக்கா உட்பட மொத்தம் 16 வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் இவர் தானாம்… செல்லாது செல்லாது… கதறும் ரசிகர்கள்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.