டாப் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? ஆனா இவங்க ரோல் மட்டும் இல்ல.. ஜெயம் ராஜா சொன்ன குட் நியூஸ்..!

Published on: November 28, 2023
---Advertisement---

Jayam Raja: தமிழ் சினிமாவில் கமர்சியல் ஹிட் இயக்குனரின் வரிசையில் முக்கியம் இடம் ஜெயம் ராஜாவுக்கு உண்டு. இவர் பெரும்பாலும் ரீமேக் கதையே இயக்கி வந்த நிலையில் அவரின் சொந்த கதையான தனி ஒருவன் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தற்போது ரவியை வைத்து தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்க இருக்கிறார். இதற்கு வலுவான வில்லன் ரோல் தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது. முதல் பாகம் போன்று இந்த பாகத்திலும் நடிகை நயன் தாரா தான் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதையும் படிங்க: அது வேற வாய்!.. இது நாற வாய்.. மீண்டும் கிளம்பிய சூப்பர்ஸ்டார் சர்ச்சை.. இந்த வாட்டி மாட்டியது இவரா?..

எடிட்டர் மோகனின் மூத்த மகன் தான் ராஜா. தென்காசி பட்டணம் படத்தின் தெலுங்கு பதிப்பினை இயக்கியதன் மூலம் இயக்குனராக சினிமாவிற்கு வந்தவர் தான் ராஜா. முதல் படமே பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதை தொடர்ந்து தமிழில் ரவியை வைத்து ஜெயம் படத்தினை இயக்கினார்.

இதுவும் ரீமேக் தான். படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தினை இயக்கினார். இப்படத்திற்காக சினிமாவில் பெரிய ப்ரேக்கில் இருந்த நதியாவை அழைத்து வந்தார். அவருக்கும், ரவிக்குமான சீன்கள் கொஞ்சமே என்றாலும் பெரிய ரீச்சை படத்துக்கு கொடுத்தது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: அம்மா சொல்றது தான் உண்மை.. சாட்சி சொன்ன செழியனை குழப்பிய ஈஸ்வரி… பொய் சொல்லும் கோபி..!

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தினை ராஜா உருவாக்கி வரும் நிலையில் எம்.குமரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முடிவில் ராஜா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து ராஜா அளித்துள்ள ஒரு பேட்டியில் தெரிவிக்கும் போது, எம்.குமரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்க்ரிப்ட்டை எழுதி வருகிறேன். விரைவில் அதை படமாக எடுக்க போகிறோம்.

ஆனால் இந்த கதையில் மகாலட்சுமி ரோல் இருக்காது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். ப்ரதர், தக் லைஃப் படங்களின் ஷூட்டிங்கினை முடித்துக் கொண்டே ரவி, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் இணைவார் என நம்பப்படுகிறது. அப்படங்களை முடித்த பின்னரே எம்.குமரன் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.