Connect with us

Cinema News

அம்மா சொல்றது தான் உண்மை.. சாட்சி சொன்ன செழியனை குழப்பிய ஈஸ்வரி… பொய் சொல்லும் கோபி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி தேவையே இல்லாம ஒரு பிரச்னையை உருவாக்கி விட அது பூகம்பமாக வெடித்து நிற்கிறது. பாக்கியா நான் என்ன வேணா செய்வேன்? என்ன கேள்வி கேட்க இவரு யாரு? இவருக்கு எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு?

அதான் வேண்டாம்னு ஆச்சுல என்கிறார். உடனே ஈஸ்வரி நான் கேள்வி கேட்கலாம் தானே. அந்த பழனிசாமியால தான் இவ்வளோ பிரச்னையே எனக் கூற கோபிக்கு ஜாலியாகி விடுகிறது. குடும்பத்தினர் அதிர்ச்சி ஆகிவிடுகின்றனர். அவர் ஏன் யாரும் இல்லாம வரணும்?

இதையும் படிங்க: அது வேற வாய்!.. இது நாற வாய்.. மீண்டும் கிளம்பிய சூப்பர்ஸ்டார் சர்ச்சை.. இந்த வாட்டி மாட்டியது இவரா?..

அதுக்கு நீ கோபிய வீட்டை விட்டு வெளிய போக சொல்லுவியா என்கிறார். உடனே கோபி நெருக்கமா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. இதே இனியா அவ ப்ரண்ட்ஸ் உடன் வந்து பாத்தா என்ன நினைப்பா? இல்ல எழிலும், அமிர்தாவும் உள்ள வரும்போது இப்படி இருந்தா இந்த பொண்ணு என்ன நினைக்கும் என்கிறார்.

உடனே அமிர்தா நான் எதுவும் நினைக்க மாட்டேன். எனக்கு அம்மா பத்தி தெரியும் என்கிறார். சரி இனியா வந்து பாத்தா என்ன ஆகும்? அக்கம் பக்கம் இருக்கவங்க எதும் நினைப்பாங்கள எனக் கோபி கூற ஈஸ்வரி அதையும் அமோதிக்கிறார். இதனால் கடுப்பாகும் பாக்கியா அக்கம் பக்கம் இருப்பவங்களுக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும். உங்க பிள்ளை பேசுறது தான் சரியே இல்லை என்கிறார்.

இதனால் எழில் கடுப்பாகி சண்டைக்கு போக அவரை தடுத்து உள்ளே வருகிறார் செழியன். நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். யாரும் இல்லனு சொல்லிட்டு இருக்கீங்க. நான் இங்க தான் இருந்தேன் என்கிறார். கோபி அதெல்லாம் இல்லையே என்க மாடியில நின்னேன் என்கிறார். அந்த மனுஷன் மன்னிப்பு கேட்டுக்கிட்டு தான் பேசவே ஆரம்பிச்சாரு.

இதையும் படிங்க: ஸ்ருதியை காப்பாத்திய மீனா..! வீட்டுக்கு செல்ல ஓகே சொல்லியாச்சு… இனி சண்டை களைக்கட்டுமோ?

நான் பேசிட்டு தான் போனேன் என்கிறார். உடனே ஈஸ்வரி அம்மாவுக்கு சப்போர்ட்டா? இவ நினைச்சா ஜெனியும் உன்னையும் எப்பையோ சேர்த்து வச்சிருக்கலாம். ஆனா செய்யலை என ப்ளேட்டை மாற்ற செழியன் நான் தப்பு பண்ணிருக்கேன். அதுக்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான் என்கிறார். உடனே கோபி எல்லாரையும் ட்யூன் செய்து வச்சிருக்கா என்கிறார். 

நீங்க பேசுன பாதியை கூட அம்மா சொல்லலை. அதுக்கே இப்படியா என்கிறார். எழில் என்ன சொன்னாரு எனக் கேட்க அதை சொல்ல வாய் கூசுது. அந்த மனிஷன் தலை குனிஞ்சி போனாரு என்கிறார் செழியன். இப்போ உனக்கு அதான் கவலையா என்கிறார் செழியன். இவரு பேசுனது அப்படி. அது தாங்க முடியாம தான் அம்மா வெளியே போக சொன்னாங்க என்கிறார்.

இதையடுத்து இனியாவை வெளியில் பார்க்கிறார் ராதிகா. காரை அனுப்பி விட்டு அவருடன் நடந்து வீட்டுக்கு வர கோபி அவரை பார்த்தவுடன் வா ராதிகா நீ தான் நியாயத்தை சொல்லுவ என்கிறார். ஒன்னும் புரியாமல் ராதிகா பார்த்துகொண்டு நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: உங்கள மாதிரி அமீர் ஒண்ணும் பிட்டு படம் எடுக்கல!.. ஞானவேல் ராஜாவை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top