அறிவிப்போடு நின்று போன ரஜினியின் திரைப்படங்கள்! மோதலில் முடிந்த திரைப்படத்தின் கதை தெரியுமா?

Rajini: ரஜினியின் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். அதுவும் சமீப காலமாக ரஜினியின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகின்றது. வயதானாலும் அவருடைய மாஸ் இன்னும் குறையவே இல்லை. ஒவ்வொரு நாளும் அவருக்கான ஹைப் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

திரையில் சும்மா வந்து நின்றாலே போதும் ரசிகர்களுக்கு அது ஒரு புத்துணர்ச்சி போல தான் இருக்கின்றது. தற்போது ரஜினி வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரு திரைப்படங்களின் மீதும் ரசிகர்கள் மத்தியிலும் சரி திரையுலகினர் மத்தியிலும் சரி ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதையும் படிங்க: காக்க வச்சி கடுப்பாக்கிய கமல்!.. நல்லவனா இருந்தா பிடிக்காதே! ரூட்டை மாற்றிய சிம்பு..

ரஜினியை வைத்து ஞானவேல் எப்படிப்பட்ட ஒரு கதையை அமைத்திருக்கிறார் என்ற வகையிலும் லோகேஷ் ரஜினியை வைத்து எப்படி ஒரு ஆக்சன் கதையை கொடுக்கப் போகிறார் என்பதைப் பற்றியும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் எந்தெந்த படங்கள் அறிவுப்போடு நின்று போனது என்பதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் சிவசுப்பிரமணியத்துடன் இருந்த ஒரு பிரச்சனை காரணமாக படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே நடந்து வெளியேறி விட்டதாக ரஜினி ஒரு மேடையில் கூறியிருப்பார். அந்த படம் அதோடு அப்படியே நின்று போனது. அதேபோல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த திரைப்படம் ராணா. அந்த திரைப்படமும் அறிவிப்போடு நின்று போனதாகவும் இதே போல் ஜக்குபாய் என்ற திரைப்படமும் நின்று போனது என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். இதுவரை இந்த படங்கள் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேலும் வெளியாகாது என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தங்கலான் விக்ரமுக்கே டஃப் கொடுக்கும் கவின்!… நெல்சனின் முதல் படமே தாறுமாறா இருக்கே!…

 

Related Articles

Next Story